பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/5

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

அற நூலுள் கூறப்பெற்ற அருங்கருத்துக்களை வாழ்க்கையில் கொண்டு செலுத்திய பெரியார்கள் எல்லா நாட்டிலும் உண்டு. பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்பெறும் பெரியார்களின் வாழ்க்கையைக் குறளின் அடிப்படையில் காண வேண்டும் என்ற முறையில் தோன்றியவைகளே இக்கட்டுரைகள்.

இந்நூலுள் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் அனைத்தும் ‘ஆனந்த விகட’னில் வெளியானவை. எனவே, 'ஆனந்த விகடன்' ஆசிரியர் அவர்கட்கு என்னுடைய நன்றி முதற்கண் உரியதாகுக.

என்னுடைய கட்டுரைகளை நூல் வடிவில் ஆக்கியமைக்காக கங்கை புத்தக நிலையத்தாருக்கு என் நன்றியைத் தெரிவிப்பதோடு, அந்நிலையம் ஆல்போல் தழைக்க வாழ்த்துகிறேன்.

அ. ச. ஞானசம்பந்தன்