க ச ட் சி க ள் 247
247. முல்லை மலர்ந்தது முகம் மலர்வாய் !
காதலன் வரும் நாளைக் கணக்கிட்டுச் சுவரிலே கோடு போட்டிருந்தாள். அதை எண்ணி எண்ணிப் பார்த்து ஏங்கிளுள்; வருந்தினுள். வளைகள் நெகிழ்ந்தன.
‘வருந்தாதே ! இதோ பார் வந்துவிட்டது. முல்லை மலரும் காலம் !’ என்றாள் தோழி: -
மாடு மேய்க்கும் இடையர்கள் தலையிலே முல்லே மலர் சூடிச் சென்றார்கள். அதைக் காட்டிள்ை அவளுக்கு.
வீங்கு இழை நெகிழ, விம்மி, ஈங்கே எறிகண் பேதுறல்; ஆய்கோடு இட்டுச் சுவர்வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க வருவேம்’ என்ற பருவம் உதுக்காண் : தனியோர் இரங்கும் பனி கூர் மாலைப் பல் ஆன் கோவலர் கண்ணிச் சொல்லுப அன்ன, முல்லை வெண் முகையே.
-கொற்றன்
248. ம டி க ண் ட மங் ைக
பனிக்காலம். மாலே கேரம், பகல் முழுதும் புல் மேய்ந்த பசுக்கள் வீடு திரும்புகின்றன. கன்றை கினேந்து மடி கனத்துப் பால் வழிகிறது.
பார்த்தாள் அவள். கண்ணிர் வடித்தாள்.
‘புண்ணியசாலிகள்’ என்றாள்.
- யார்?’ என்றாள் தோழி.
‘இத்தகைய மாலேயிலே காதலன் வரப்பெற்றாேர்’ என்றாள். நோற்றாேர் மன்ற - தோழி! - தண்ணெனத் துாற்றும் துவலேப் பனிக் கடுங் திங்கள் புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றாெடு