பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மும் ஊட்டி, உயர்ந்தோராக்குதல் தன் கடின் என்பதை உணர்ந்திருந்தான் தந்தை. அம்மக்கள் அறநெறி நிற்கும் ஆன்றாேராய் வளர்தற்குத் தன் நல்லாட்சியே காரணமாம் என அறிந்திருந்தான் அரசன்; தாயும் தந்தையும், தம் நாட்டு அரசனும் தத்தம் கடமையில் தவருது நின்று வளர்க்க வளர்ந்த தாங்கள், அவர் கனவு நினைவாகுமாறு, போரில் புறங்கொடாது, வேழங்களே வெட்டி வீழ்த்தி வெற்றி பெறுதல் முதலாம் தொண்டுகளில் தவருமை தம் கடனம் என அறிந்திருந்தனர் அம்மக்கள். அம்மக்கள், நாடுகாவல் முதலாம் அவர் கடமைகளைக் குறைவற முடித்து வெற்றி பெறுதற்கு வேன்டும் வேற்படை முதலாம் வகை வகையான படைக்கலங்களைப் படைத்தளித்துத் துணை புரிதல் தம் கடமையாம் என அறிந்திருந்தனர், கொல்லன் போலும் அந்நாட்டுத் தொழில்புரி மக்கள் :

‘ஈன்று புறந்தருதல் என்தலைக்கடனே,

சான்றேன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; நன்னடை கல்கல் வேந்தற்குக் கடனே; - ஒளிறுவாள் அரும்சமம் முருக்கிக் . களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.”

இவ்வாறு, ஒவ்வொருவரும் தம் தம் கடமை புணர்ந்து வாழ்ந்தமையால், அவர்களிடையே பகை தோன்றவில்லை. ஒற்றுமை வளர்ந்தது. அனைவரும் அன் பால் கட்டுண்டு கிடந்தனர். ஒன்றுகூடி வாழ்ந்தமை

A புறநானூறு 312. பொன் முடியார். -

சன்று.பெற்று புறந்தருதல்.வளர்த்துவிடுதல்; வடித்துபண்ணி, நன்னடை.நல்லொழுக்கம்; ஒளிறு-ஒளிவீசும்; அரும்சமம்_கொடிய போர் முருக்கி-அழித்து: எறிந்து. கொன்று பெயர்தல்-வென்று மீளுதல்,