இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குறும்பா
55
நல்லவரைக் காணவில்லை நாட்டில்
‘நரிகள் பன்றிகள்' என்றெழுதினேன் ஏட்டில்;
வல்ல தோழன் வாய் திறந்தான்
‘வாழ்ந்தவர்கள் பலரும் சுடு காட்டில்’
சொல் முடியுமுன் யாமிருவர்
துறத்தப்பட்டோம் நல்லார் சிறைக் கூட்டில்!
◯
நல்லிசைப்பண் பாடல்தந்தான் பொன்னி
நாடவில்லை வந்தவர்கள் எண்ணி;
புல்லிசைப்பண் பாடலுற்றாள்
புடவை நெகிழ ஆடலுற்றாள் கன்னி;
வல்லிசையின் பல்லியங்கள்
வாய் பிளந்து காணலுற்றார் உன்னி!
◯
வீரவழி பாட்டினுக்கோர் ஆளை
வேண்டி உலாப் போந்து வந்தார் கோளை;
ஆர அமர எண்ணிடாமல்
அடுத்துவரும் தேர்தலுக்காம் நாளைக்
கூறப்பலர் கொண்டு வந்தார்
குற்றத்திலே தோய்ந்த ஒரு தோளை!
◯
நாட்டுடைகள் அணிந்திருந்த போது
நல்லபடிதான் இருந்தாள்அம் மாது
வீட்டிலிருந்து திரையரங்கம்
மேவி இரு படங்கண்டபின் தீது
காட்டும் இழி நாகரிகக்
காட்சிப்பொருள் ஆனா இப்போது!