பக்கம்:குற்றால வளம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

25


 ஒவ்வொரு அறமும் நாள் ஆக ஆக நோக்கம் மறந்து அறத்தின் மாறுபட்டனவாக மாறி விடுவதை இவற்றுனும் இன்னும் பலவற்றானும் அறியக்கிடக்கின்றது. விரிவஞ்சி விடுக்கின்றேன். உலக இயல்பு இதுவேயாகும். அறிவோர். என்றும் அறக்கடனிறுத்தல்-அதாவது சீர்திருத்தம் செய்தல்-அரும்பணிசெய்து கிடத்தலிலேயே வாணாள் கழிப்பர். கடன் முடிந்த தென்று ஓய்வு பெறுநாள் அறவோர்க்கில்லை. அவ்வாறு ஓய்வு பெறவிடுதல் உலக இயல்பன்று. ஓயாமல் அறவோர்க்குப் பணி தந்து கொண்டிருத்தலே உலக இயல்பு.



"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/34&oldid=1293895" இலிருந்து மீள்விக்கப்பட்டது