பக்கம்:குற்றால வளம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

33


துடைத்துவைத்துக் கொள்தல் முதலியவற்றில் எல்லாம் வெளிநாட்டாரைப் பின்பற்ற வேண்டுவது அவசியமாக விருக்கிறது. இவை யெல்லாம் வெளிநாட்டாரைப் பார்த்துத்தான் செய்யவேண்டுமென்பதில்லை. நாமாகவே செய்ய வேண்டுவது. நம்மில் பலர் செய்யவில்லை. இந்நாள் வெளியே பலர் செய்கின்றார்: அவர்களைப் பார்த்தும் அவர்கள்பால் உள்ள நல்ல்னவற்றை நம்மவர் கொள்ளா துறைதல் 'வெட்ககரமானது, ஆனால், நல்லன கொள்தலை விடுத்துத் தீயன பலவற்றை வெளிநாட்டாரிடம் கொள்கின்றார் நம்மிற் பலர். தீயன வெளிலேயிருந்தும் கொள்ளலாகா; நம்மிட முள்ளவற்றையும் இன்னே தொலைத்தல் வேண்டும். நல்லன யாண்டியாண்டு கிடைப்பினும் எல்லாவற்றையும் நாடிக்கொண்டு நல்லனவே செய்து வாழவேண்டுவது மக்கள் பெருங்கடன்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/42&oldid=1295400" இலிருந்து மீள்விக்கப்பட்டது