இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குற்றால வளம்
79
தல், கொலை செய்தல், சிற்றினஞ் சேர்தல், சூதாடல், செய்ந்நன்றி கொல்தல், புறங்கூறுதல், பெரியார்ப் பிழைத்தல்; பொய் புகல்தல் முதலியன ஒழுக்கமின்மையின்பாற் பட்டவைகளே யாகும். ஒழுக்கங் காத்தல் என்பது இன்னோரன்ன ஒன்றையும் ஆற்றாதொழுகுதலே யாகும். ஒழுக்கமின்மையாகிய மேற்குறித்த ஒவ்வொன்றிலுள்ள தீமைகளையும் எடுத்துரைப் பதாயின் ஒவ்வொன்றையும் தனித்தனிக் கட்டுரையாக எழுதினாலன்றி அமையாது. அத் துணைத்தீமை நல்கத்தக்கன. அவைகள்; ஒழுக்கம் என்னும் உயர்வுபெற விரும்பும் மக்கள் ஒழுக்கமின்மை யாகிய இன்ன செயல்களைக் கனவிலும் கருதாது அறத்தாற்றின் ஒழுகுவாராக?