பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்கள் - ஆறுகள்

65

குல் ஆழ்வார்கள்: திருமாலிடம் ஆழ்ந்த அன்பு கொண்டிருந்தவர்கள் ஆழ் வார்கள். இவர்கள் பன்னிருவர் ஆவர். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திரு மங்கை ஆழ்வார், திருப்பாணாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், சேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண் டாள் (த.க.), நம்மாழ்வார் (த.க.), மதுர கவி ஆழ்வார் என்பன இவர்கள் பெயர். ஆண்டாளையும், மதுரகவியாழ்வாரையும் நீக்கி ஆழ்வார்கள் பதின்மர் கூறுவர். ஆழ்வார்கள் அனைவரும் தமிழ் நாட்டில் வாழ்ந்தவர்கள். இவர்கள் காலம் ஐந்தாம் நூற்றாண்டு முதல் பதினொன் றாம் நூற்றாண்டுவரையிலாகும். இவர் களுள் திருமங்கையாழ்வாரும், குலசேகர ஆழ்வாரும் மன்னர்கள்; திருப்பாணாழ்வார் இசை பாடும் பாணர் மரபினர். மற்றவர்கள் வெவ்வேறு மரபைச் சார்ந்தவ ராயினும் ஆழ்வார்கள் அனைவரும் ஒரே குலத்தவர் ஆவார்கள். என்றுங் ஆழ்வார்கள் - ஆறுகள் இறைவனிடத்தில் இவர்கள் அளவற்ற அன்பு கொண்டு, உள்ளம் உருகிப் பல இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடியுள்ளார் கள். இப்பாடல்களின் தொகுப்புக்கு 'நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்' என்று பெயர். வேதங்கள், உபநிடதங்கள் ஆகிய வற்றின் கருத்துகள் யாவும் இப்பாடல் களில் அடங்கியுள்ளன. வைணவர்கள் இப்பாடல்களை நாள்தோறும் திருமால் சந்நிதியில் பாராயணம் செய்து வருகின் றனர். எந்தக் இறைவனிடத்தில் அன்புடையவர்கள் குலத்தைச் சேர்ந்தவர்களானா கடல் கழிமுகம் = கழிமுசத் தீவு லும் அவர்களை வணங்கி வழிபட வேண் டும் என்பது ஆழ்வார்கள் வழங்கிய போதனைகளில் ஒன்று. ஒவ்வொருவரும் தம்மை இறைவனிடம் அடைக்கலமாக ஒப் படைத்துவிட வேண்டும்; இந்தச் 'சரணா கதி'யே மிகவும் மேலானது என்றும் அவர் வற்புறுத்தியுள்ளார்கள். உயிர்களுக் கெல்லாம் தொண்டு செய்வதையே ஆழ் வார்கள் தம் பெருங் கடமையாகக் கொண் டிருந்தனர். கள் ஆறுகள்: மழை பெய்யும் பொழுது தெருவில் நீர் வழிந்தோடு வதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி நீர் ஓடுவதைப் பார்த்தே ஆறு உண்டாகும் விதத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம். மழைநீர் ஒன்று சேர்ந்து சிறுசிறு ஓடை களாகின்றது. இந்த ஓடைகள் மற்றும் சில ஓடைகளுடன் சேர்ந்து ஒரு பெரிய நீரோட்டமாகிறது. இதே போலத்தான், மலைகளிலும் குன்றுகளிலும் பெய்யும் மழை நீர் பல சிறு ஓடைகளாக ஓடிப் பிறகு ஒன்றாகச் சேர்ந்து ஒரு பெரிய ஆறாக உரு வாகின்றது. சில சமயம் ஆறுகள் பெரும்பாலும் மலைகளிலேயே உற்பத்தியாகின்றன. நீர் ஊற்றுகளும் ஆறாக ஓடுவது உண்டு. இமய மலை போன்ற பகுதிகளில் சூரிய வெப்பத் தினால் பனிக்கட்டிகள் உருகி, நீர் ஆறாகப் பாய்கின்றது. ஆகவே பனிக் கட்டிகளும் ஆறுகளை உண்டாக்குகின்றன. பெரிய ஆறுகளுடன் வந்து கலக்கும் சிறு ஆறுகளுக்குத் துணையாறுகள் என்று பெயர். பெரிய ஆறுகளிலிருந்து சில ஆறு கள் கிளையாகப் பிரிந்து செல்வதுண்டு. நீர்வீழ்ச்சி துணையாறு கிளையாறு 65 ஃபள்ளத்தாக்கு ஞா பனியாறு