பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியா

83

இந்தியா காச்மீரத்தில் உள்ள ஒரு சாலை சாலை முழுவதும் பனியால் மூடப்பட்டிருக்கிறது. மரங்கள் மீதும் வீடுகள் மீதும் பனி படிந்திருக் கிறது. இங்குள்ள மக்கள் கடுங்குளிரைத் தாங்கு வதற்காகக் கம்பளி ஆடைகளை அணிந்து கொள்கிறார்கள். களாகும். பனி மூடிய சிகரங்களும், மெல்ல நகர்ந்து செல்லும் பெரிய பெரிய பனி யாறுகளும், உயரமான அருவிகளும், ஆழ்ந்த பள்ளத்தாக்குகளும், பரவலான புல்வெளிகளும் இமயமலைத் தொடரில் ஆங்காங்கு காணக்கூடிய காட்சிகள் ஆகும். இந்தியாவின் மத்திய பகுதியில் ஆர வல்லி மலைத்தொடர், விந்திய மலைத் தொடர், சாத்பூரா மலைத்தொடர் ஆகியவை உள்ளன. தென்னிந்தியாவின் கிழக்குப் பகுதியில் கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குக் கடற்கரையோரம் மேற்குத் தொடர்ச்சி மலையும் உள்ளன. இவை இரண்டும் நீலகிரி மாவட்டத்தில் ஒன்றுகூடுகின்றன. இமயமலைக்கும் விந்தியமலைக்கும் இடை யிலுள்ள நிலப்பகுதிக்குச் சிந்து-கங்கைச் சமவெளி என்று பெயர். விந்திய மலைக் குத் தெற்கே உள்ள பகுதியைத் தக்கணம் என்று அழைப்பார்கள். வட இந்தியாவில் கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா ஆகிய ஆறுகளும், அவற் றின் துணையாறுகளும் ஓடுகின்றன. மத்திய இந்தியாவில் மகாநதி, தபதி, நருமதை ஆகிய ஆறுகள் பாய்கின்றன. தென்னிந்தியாவில் கோதாவரி, கிருஷ்ணா, வடபெண்ணை, பாலாறு, தென்பெண்ணை, காவிரி, வையை, தாமிரபருணி ஆகிய ஆறுகள் ஓடுகின்றன. இந்த ஆறுகளை அடுத்துச் செழிப்பான சமவெளிகள் உள்ளன. 83 இந்தியாவின் வடமேற்கில் தார் பாலை வனம் இருக்கிறது. அதில் ஓடும் ஒரே ஆறு லூனி என்பதாகும். அங்குப் பல உப்புநீர் ஏரிகளும் உள்ளன. அவற்றுள் முக்கிய மானது சாம்பர் ஏரி. இந்தியாவை அடுத்துப் பல தீவுகள் உள்ளன. தென்கோடியில் உள்ள இலங் கைத் தீவு ஒரு சுதந்தர நாடு. வங்காளக் குடாக்கடலில் இருக்கும் அந்தமான் (த.க.), நிக்கோபார் (த.க.) தீவுக் கூட் டங்களும், அரபிக் கடலில் உள்ள இலட் சத் தீவுகளும், மினிக்காய், அமிண்டிவிஸ் தீவுகளும் இந்தியாவைச் சேர்ந்தவை. தட்ப வெப்பம்: இந்தியாவில் மிகவும் மாறுபட்ட தட்ப வெப்ப நிலைகள் காணப்படுகின்றன. தென்னிந்தியா வெப்ப மண்டலத்தில் உள்ளது. இந்தியா மி தவெப்ப மண்டலத்தில் அமைந்திருக்கிறது. இமயமலைச் சிகரங்கள் பலவற்றில் எப்போதும் பனி உறைந் திருப்பதால் அங்கு ஆர்க்டிக் சமுத்திரத்தின் குளிர் நிலையைக் காணலாம். வட மாநிலத்தில் செரபுஞ்சி என்ற இடத்தில் ஆசாம் கோடைகாலத்தில் தங்குவதற்சேற்ற சுகவாசத் தலங்கள் இந்தியாவில் நிறைய உண்டு. தமிழ் நாட்டிலுள்ள குற்றாலம் அவற்றுள் ஒன்று. குற்றால அருவியைப் படத்தில் காணலாம்.