பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 இலங்ை அமைந்திருப்பதால் இங்கு வெயிலும் அதிகம்; மழையும் அதிகம். இலங்கையில் ஓடும் முக்கியமான ஆறு கள் மகாவலி கங்கை, அருவையாறு என்பன. பெரிய ஏரிகளும் இங்கு உண்டு. அவற்றுள் சேன நாயக சமுத்திரம் என்ற ஏரி மிகவும் பெரியது. இதன் பரப்பளவு 100 சதுர கி. மீ. இத்தீவில் காடுகள் அடர்ந்திருப்பதால் உழுது பயிர் செய் வதற்கான நிலம் குறைவு. தேயிலை , ரப்பர், தென்னை , இலவங்கம், ஏலம், கோக்கோ, நெல் ஆகியவை இங்கு விளை கின்றன. இவற்றுள் பெரும்பகுதி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இலங்கைக் காடுகளில் சிறுத்தை, யானை, மான், குரங்கு, கரடி, குள்ள நரி ஆகியவை வாழ்கின்றன. பலவகைப் பறவை இனங்களும் இங்கு உண்டு. ஏரிகளிலும், ஆற்று முகத்துவாரங்களிலும் முதலைகள் ஏராளமாக உள்ளன. இத்தீவில் மிகச் சிறந்த வகை கிராபைட்டு கிடைக்கிறது. மாணிக்கம், நீலம், வைடூரியம் முதலிய மணிகளும் கிடைக்கின்றன. இலங்கையின் தலைநகரம் கொழும்பு. இது ஒரு துறைமுகப் பட்டினம். பெரிய விமான நிலையம் ஒன்றும் இங்கு உள்ளது. அனுராதபுரம் என்பது ஒரு பழைய நகரம். காடுகள் சூழ்ந்துள்ள கதிர்காமத்தில் புகழ் பெற்ற முருகன் கோயில் ஒன்று உள்ளது. திரிகோணமலை, யாழ்ப்பாணம், கண்டி இவை மற்ற முக்கிய நகரங்கள். இலங்கை யின் வட பகுதியில் தமிழர்கள் பெரும் அளவில் வாழ்கின்றனர். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பழங்காலம் முதல் மிக நெருங் கிய தொடர்பு உண்டு. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தமிழ்க் காப்பியங் களில் இலங்கையைப் பற்றிய செய்திகள் வருகின்றன. அசோகர் (த.க.) தம் மகனை யும் மகளையும் இலங்கைக்கு அனுப்பி பௌத்த சமயத்தைப் பரவச் செய்தார். இராசேந்திர சோழன் (த.க.) ஆட்சியில் இலங்கை முழுவதும் சோழ நாட்டுக்கு உட்பட்டிருந்தது. பராக்கிரமபாகு என்ற சிங்கள மன்னர் சோழருடன் போராடித் தம் நாட்டை மீட்டுக்கொண்டார். அவர் பொலனறுவை என்ற மிக அழகிய நகரம் ஒன்றை அமைத்தார். பெரிய அரண்மனை ஒன்றையும், பெளத்த மடங்களையும் கட்டினார். 1505-ல் போர்ச்சுகேசியர் இலங்கை யைக் கைப்பற்றினார்கள். அவர்களிட மிருந்து 1658-ல் டச்சுக்காரர்கள் இதைப் பிடித்துக் கொண்டார்கள். 1776-ல் டச்சுக் காரர்களை விரட்டிவிட்டு ஆங்கிலேயர் இலங்கையில் செல்வாக்குப் பெற்றனர். 1815-ல் இத்தீவு முழுவதுமே ஆங்கிலேயர் க - இலை ஆட்சிக்கு வந்தது. ஆங்கிலேயரிடமிருந்து 1948-ல் இலங்கை விடுதலை பெற்றது. இலங்கையின் மக்கள் தொகை 1,04,50,000. இவர்களில் பாதிப் பேருக்கு மேல் பௌத்தர்கள். இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் ஆகியோரும் வாழ்கிறார்கள். சிங்கள மொழியும் தமிழும் பேசப்படுகின்றன. இலியடு: உங்கள் எல்லாருக்கும் இராமாயணமும் மகாபாரதமும் தெரிந் திருக்கும். இவைபோன்று கிரேக்க நாட்டி லும் இரண்டுபெரிய காப்பியங்கள் உண்டு. அவை இலியடு, ஆடிசி (த.க.) என்பன. பண்டைய கிரேக்க நாட்டில் ஹோமர் என்ற புகழ்பெற்ற கவி ஞர் ஒருவர் இருந்தார். அவர் பாடிய காப்பியம் இலியடு என்பது. அவர் இக்காவியத்தை எளிய இனிய சொற்களில் இயற்றி இருக்கின்றார். ஆசியாக் கண்டத்தின் ஒரு பகுதியான ஆசியா மைனரில், முன் ஒரு காலத்தில் டிராய் என்று ஒரு நகரம் இருந்தது. அதற்கு இலியம் என்றும் பெயர் உண்டு. அதைப் பற்றிய வரலாற்றைக் கூறுவதால் இந் நூலுக்கு இலியடு என்று பெயர் வந்தது. கிரேக்க நாட்டை மெனிலேயஸ் என்ற மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் மனைவி ஹெலன் ஒரு பேரழகி. டிராய் நாட்டு மன்னனின் மகன் பாரிஸ் என்ப வன் அவளைத் தூக்கிக்கொண்டு போய் விட்டான். மெனிலேயஸ் அதற்கு அவனைப் பழிவாங்க முற்பட்டான். ஆகமெம்னன் என்ற மன்னன் தலைமையில் கிரேக்கப் படை ஒன்றைத் திரட்டினான். இப்படை டிராயைப் பத்து ஆண்டுகள் முற்றுகை யிட்டு வெற்றி பெற்றது. மெனிலேயஸ் ஹெலனை மீட்டுக்கொண்டு நாடு திரும் பினான். அப்போது அவனும் அவன் படை வீரர்களும் அளவற்ற துன்பங்களுக்கு ஆளாயினர். முற்றுகையின் பத்தாம் ஆண்டு நிகழ்ச்சிகளையும், வழியில் ஏற் பட்ட இடையூறுகளையும் கூறுகின்றது இலியடு என்ற இந்தக் காப்பியம். இலை : மரம், செடி, கொடிகளின் முக்கியமான உறுப்புகளில் ஒன்று இலை யாகும். இலையைத் தழை என்றும் சொல்லுகிறோம். பனை ஓலை, தாழை மடல் கரும்பின் தோகை, வெங்காயத் தாள் ஆகியவையும் இலைகளேயாகும். இலைகளில் பலவகையான வடிவங்கள் உண்டு. தாமரை இலைகள் வட்டமாக இருக்கும். தென்னை ஓலை நீளமாக இருக் கும். பப்பாளி இலைகள் கைவிரல்களைப் போலப் பிரிந்திருக்கும். வேம்பு போன்ற