பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண கிறது. மறுபடியம் ஆனால் நோன் வாறு கண்டும் காசிக்கத் - 08 உணவு: பசிக்கும்போது சாப்பிடத் துடிக்கிறீர்கள். சாப்பிட்ட பிறகு பசி அடங்கிவிடுகிறது. ஆனால் நேரம் செல்லச் செல்ல மறுபடியும் பசிக்கத் தொடங்கு கிறது. மீண்டும் சாப்பிடுகிறீர்கள். இவ் வாறு பசிக்கும்போதெல்லாம் உணவு சாப்பிடுகிறீர்கள். பசியோடு பள்ளிக்குச் செல்ல முடியுமா? சென்றாலும் படிக்க முடியுமா? முடியாது ; விளையாடவும் முடியாது. சுருக்கமாகச் சொன்னால் உணவு இல்லாமல் உயிர் வாழவே முடியாது. உயிர் வாழ்வதற்கு உணவு இன்றியமை யாதது. நாம் உண்ணும் உணவு உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றது. மூளை, இதயம், நுரையீரல், சீரண உறுப்புகள், இரத்த நாளங்கள், நரம்புகள் இவை யாவும் தத் தம் தொழிலைத் தவறாது செய்து வர வேண்டும். அதற்கு வேண்டிய சத்துகளைக் கொடுப்பது உணவுதான். உண்பதெல்லாம் நல்ல உணவாகாது. உடல் நலத்துக்கு உதவும் உணவு மட்டுந் தான் நல்ல உணவாகும். உண்ணும் உணவு வயிற்றுப் பசியை அடக்க வேண் டும்; சுவையாகவும், மணமாகவும் இருக்க வேண்டும்; பார்க்க அருவருப்பாக இருக் கக்கூடாது. உடல் உறுப்புகள் எல்லாவற் றுக்கும் அது ஊட்டம் கொடுக்க வேண் டும்; எளிதில் சீரணமாக வேண்டும். இப் படிப்பட்ட உணவு தான் உடம்புக்கு ஏற்ற தாகும். உணவில் முக்கியமாக ஐந்து வகை ஊட் டப் பொருள். சேர்ந்திருக்க வேண்டும். அவை: 1. மாச்சத்துகள் அல்லது கார்போ ஹைடிரேட்டுகள் ; 2. கொழுப்பு 3. புரதம் (புரோட்டீன் ); 4. வைட்ட மின்கள்; 5. தாதுப்பொருள்கள் என்பன. அரிசி, கோதுமை, தேன், வெல்லம், கிழங்கு வகைகள், பட்டாணி, மொச்சை போன்றவற்றில் மாச்சத்துகள் நிரம்ப உண்டு. இவற்றை அளவாக உண்ண வேண்டும். அளவுக்கு மீறினால் உடம்பில் தேன மாச்சத்துகள் கொழுப்பு ரவு 33 சதை போடும். நெய், பால், எண்ணெய் வகைகள், இறைச்சி, ஈரல், முட்டை மஞ்சட்கரு இவற்றில் கொழுப்புச் சத்து உள்ளது. பயறு வகைகள், பருப்பு வகைகள், எண்ணெய் விதைகள் கொட் டைகள், பால், முட்டை , மீன், இறைச்சி இவற்றிலிருந்து புரதம் கிடைக்கின்றது. உடம்பு வளர்ச்சிக்கு மிகவும் தேவையான அமினோ அமிலங்கள் என்ற சில பொருள் கள் புரதத்திலிருந்து கிடைக்கின்றன. நாம் உண்ணும் உணவில் போதிய அளவு புரதம் சேராவிட்டால் பல கோளாறுகள் உண்டாகும். தசைச் சேதம், இரத்தக் குறைவு, உடல் தளர்ச்சி, மனச்சோர்வு, சோகை, உடல் வீக்கம் போன்ற பல மாறுதல்களும் நோய்களும் உண்டாகும். சிறுவர்களுக்கு வளர்ச்சி குன்றிவிடும். உடல் வளர்வதற்கும், நோயின்றி வேலை செய்வதற்கும் தாதுப்பொருள்கள் உணவில் சேரவேண்டும். அவற்றுள் கால் சியமும், பாஸ்வரமும், இரும்பும் முக்கிய மானவை. கால்சியமும், பாஸ்வரமும் வைட்டமின் A,D யுடன் இணைந்து எலும்பு வளர்ச்சிக்கு உதவுகின்றன. எலும்புகளும் பற்களும் உறுதியாக இருக்க இவை மிகவும் தேவை. இவை குறைந்தால் பல் சொத்தை விழும்; நல்ல சிவப்பு இரத்தம் பரவாது; நரம்புகள் தளர்ந்துவிடும். மற் றொரு தாது இரும்பு. இதன் கலப்பினால், தான் இரத்தம் சிவப்பாக இருக்கின்றது. நுரையீரலிலிருந்து இரத்தத்தின் மூலம் உடல் முழுவதும் ஆக்சிஜன் பரவுவதற்கு இரும்பு மிகவும் தேவை. இன்னும் சிறு அளவு அயோடின், சோடியம், பொட்டா சியம், குளோரின் ஆகியவையும் உணவில் சேரவேண்டும். பால், கீரை வகைகள், காய்கறிகள், பயறு வகைகள், முட்டை , மீன் இறைச்சி ஆகியவை இந்த ரசாயனப் பொருள்களைக் கொடுக்கின்றன. வைட்ட மின்க ளில் A, B, C, D, E, K என்று பல பிரிவுகள் உண்டு. உடம்பில் ஆங்காங்குள்ள சுரப்பிகளும், உறுப்புகளும்