பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரணு - வாஸ்மா சைட்டோப்பிளாசம் எலும்பு சவ்வு உட்கரு S உயிரணு அமைப்பு இரத்த உயிரணுக்கள் (சி ஆக்சிஜனை எடுத்துச் செல்லும்; வேறு சில நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும்; ஒரே உயிரணுவாலான பிராணி அல்லது தாவரத்தில், அந்த ஒரே உயிரணுவே இந்த வேலைகள் அனைத்தையும் செய்யும். ஒவ்வோர் உயிரணுவையும் சவ்வு போன்ற உறை மூடியிருக்கும். இந்த உறைக்குள் ' புரோட்டோப் பிளாசம்' என்ற உயிர்ப் பொருள் உள்ளது. இந்த உயிர்ப்பொருள் இல்லாமல் எந்த உயிரணு வும் உயிரோடிருக்க முடியாது. இது பெரும்பாலும் நிறமில்லாதது; கூழ்போன் றது. இது உணவையும், ஆக்சிஜனையும் உட்கொள்ளும்; கழிவை அகற்றும். புரோட்டோப் பிளாசத்தின் மையத்தில் கெட்டியான திரள் ஒன்று உருண்டையாக இருக்கும். இதற்கு உட்கரு ( Nucleus ) என்று பெயர். இதுதான் உயிரணுவை இயக்குகிறது. உட்கரு இல்லாமல் உயிர்ப் பொருள் நீண்ட நேரம் உயிர் வாழாது. உட்கருவைச் சுற்றி நீர்த்த உயிர்ப்பொருள் பகுதி ஒன்று உண்டு. இது சைட்டோப் பிளாசம் எனப்படும். இது பல ரசாயனக் கூட்டுகள் சேர்ந்த ஒரு கலவை. இதன் பெரும்பகுதி தண்ணீ ர். கரி, ஹைடிரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், கந் தகம், பாஸ்வரம் இவை கலந்த புரதங் களும், மாப்பொருள், சர்க்கரை போன்ற கார்போஹைடிரேட்டுகளும், கொழுப்பு களும், பலவகை உப்புகளும் உயிர்ப் பொருளில் அடங்கியிருக்கின்றன. நமது உடலில் உள்ள உயிரணுக்களைப் போன்று தாவரங்களின் உயிரணுக்களைச் சுற்றியும் ஒரு சுவர் இருக்கும்; ஆனால் இது கடினமானது; உயிர்ப்பொருளுக்குச் சக்தி யளிக்கக் கூடிய செல்லுலோஸினால் ஆனது; உயிரற்றது. உயிரியல் உயிரணு சுரப்பி உயிரணுக்கள் நரம்பு உயிரணு தசை உயிரணுக்கள் வெப்பு, வெள்ளை) ஓர் உயிரணு முழு அளவில் வளர்ந்த வுடன் தானாகப் பிளவுபட்டு இரண்டு புதிய உயிரணுக்கள் உண்டாகும். அவை ஒவ்வொன்றும் முழு வளர்ச்சியடைந்த வுடன் பிளவுண்டு புதிய உயிரணுக்களைத் தோற்றுவிக்கும். இவ்விதம் உயிரணுக்கள் பெருகுகின்றன. உயிரணுக்கள் பல ஒன்று சேர்ந்துதான் திசுக்கள் (த.க.) உண்டாகின்றன. ஒவ் வொரு திசுவிலும் ஒரு குறிப்பிட்ட வேலை யைச் செய்வதற்குரிய ஒரே வகை உயிரணுக்கள் இலட்சக்கணக்கில் இருக் கும். இத்தகைய திசுக்கள் பல சேர்ந்து தான் நம் உடலின் ஒரு முழு உறுப்பு அமைந்திருக்கிறது. கண் ஓர் உறுப்பு; நாக்கு ஓர் உறுப்பு; இதயம் ஓர் உறுப்பு. உறுப்புகளைத் தொகுத்து அவற்றை மண்டலங்களாகப் பிரிக்கலாம். எடுத்துக் காட்டாக, வாய், நாக்கு, உணவுக் குழாய், வயிறு, பல சுரப்பிகள் இவை யாவும் சீரண மண்டலமாகின்றன. இதயம், இரத் தக்குழாய்கள், இரத்தம் இவை சேர்ந்து இரத்த மண்டலமாகின்றது. இவ்வாறே மூச்சு மண்டலம் , கழிவு மண்டலம் போன்ற பிற மண்டலங்களும் சேர்ந்து தான் நம் உடல் அமைகிறது. உயிரணு பற்றிய உண்மைகளை முதன் முதலில் ராபர்ட் ஹூக் ( Robert Hooke ) என்ற ஆங்கிலேயர் 1660-ல் ஆராய்ந்து வெளியிட்டார். இன்றைய விஞ்ஞான உலகில் ஒவ்வொரு நாளும் உயிரணுக் களைப் பற்றிப் புதுப்புது உண்மைகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. பார்க்க : அமீபா; திசு; புரோட்டோ சோவா. உயிரியல் : நாள்தோறும் நீங்கள் நாய், பூனை, கல், செடி, கொடி, மரம்,