பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுதுதல் - எறும்பு காகிதமும் அச்சு எந்திரங்களும் பழக் கத்துக்கு வந்தபிறகு புத்தகங்களும், செய் தித் தாள்களும் மிகுந்துவிட்டன. கல்வி அறிவு மிக வேகமாகப் பரவி வருகிறது. கையினால் எழுதுவதைவிட மிக வேக மாகத் தட்டெழுத்து எந்திரங்களைக் கொண்டு எழுதலாம். இந்த எழுத்துகள் அச்செழுத்துகள் போல அழகாக இருக் கும். ஒருவர் பேசும்போதே அவர் பேசும் சொற்களை ஒன்று விடாமல் எழுதிக் கொள்ளுவதற்கு எழுத்து முறை ஒன்று உண்டு. அதற்குச் சுருக்கெழுத்து என்று பெயர். உலக மொழிகளில் முக்கிய மொழிகளுக் கெல்லாம் இப்போது கருக்கெழுத்து உண்டு. இந்தியாவில் மக்கள் எப்போது எழுதக் கற்றுக்கொண்டனர் என்று திட்டமாகக் கூறமுடியாது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிந்துவெளி மக்கள் களிமண் பலகைகளின் மேல் எழுதி வந்தனர். தமிழ் மிகப் பழைய மொழிகளுள் ஒன்று. அதில் இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பே மிகச் சிறந்த இலக்கியங் கள் தோன்றியுள்ளன. அவற்றைப் படித் துப் பயன் பெற்றவர்கள் ஏராளமானவர் கள் இருந்திருக்க வேண்டும். அதனால் எழுத்துக் கலையை அதற்கு முன்பிருந்தே தமிழ் மக்கள் நன்கு அறிந்திருக்க வேண் டும். பழங்காலத்தில் நூல்களைப் பனை ஒலை சுனின் மேல் எழுதி வந்தார்கள். எழுதும் ஓலையைத் தேர்ந்தெடுத்து அதை ஒழுங் காக வாரிக் கட்டுவதே ஒரு கலையாக இருந்தது. தமிழ் மக்கள் பழங்காலத்தில் நூல்களைப் பனை ஓலைகளின்மேல் எழுதி வந்தார்கள். மன்னர்களின் ஆணைகள் கற்சுவர்களின் மேலும், செப்பேடுகளிலும் எழுதப்பட் டன. அயல்மொழிக் கருத்துகளும், சொற் களும் தமிழில் கலந்தன. சமஸ்கிருத மொழியின் கலப்பு அதிகமாக ஏற்பட் டது. தமிழில் ஏற்பட்ட இந்த மாறுதல் களுக்கு ஏற்ப எழுத்துகளை எழுதும் முறை யிலும் மாறுதல்கள் உண்டாயின. சிலர் எழுத்துகளைச் சிதைத்தும், அயல் எழுத் துகளைக் கலந்தும் எழுதினர். இந்தக் காரணங்களால் சென்ற இரண் டாயிரம் ஆண்டுகளில் தமிழ் எழுத்து 67 எழுதும் முறையில் பல மாறுபாடுகள் ஏற் பட்டன. அச்சு எந்திரங்கள் வந்த பிறகு தமிழ் எழுத்துக்களின் வடிவம் மாறாமல் இருந்து வருகின்றது. சமஸ்கிருதம், இந்தி முதலிய எழுத்து சுனைத் தலைப்பில் கோடிட்டு எழுதுவர். தாம் இடமிருந்து வலமாக எழுதுகின் றோம் அல்லவா? ஆனால் உருது எழுத்து களையும், அராபிய எழுத்துகளையும் வல மிருந்து இடமாக எழுதுவர். சீனர்கள் மேலிருந்து கீழாக எழுதுகின்றனர். நாம் பேனாவினால் எழுதுகின்றோம். தம் எழுத்துகளைத் தூரிகைகளினால் படங் கள் போலத் தீட்டுகின்றனர். சீனர்கள் இப்போது வழங்கிவரும் எழுத்துகளின் எண்ணிக்கையைச் சுருக்கவும், பேசும் ஒலி களுக்கு ஏற்ற எழுத்துகளைப் புதிதாகச் சேர்க்கவும் உலக மொழிகள் பலவற்றில் புதிய முயற்சிகள் நடைபெற்று வருகின் றன. எறும்பு: பூச்சி இனங்களுக்குள்ளே எறும்புதான் அறிவு மிக்கது. எறும்பில் 8,000 வகைகள் உண்டு. அவை உலகெங் கும் காணப்படுகின்றன. எறும்புகளால் தனித்தனியே வாழமுடி யாது. அவை ஆயிரக்கணக்கில் ஒன்று சேர்ந்து ஒரே சமூகமாக வசிக்கின்றன. சாரை சாரையாகச் சென்று இரை தேடு கின்றன. தேடிய உணவைத் தமக்குள் பகிர்ந்து தின்கின்றன. ஓர் எறும்புச் சமூகத்தில் மூன்றுவகை எறும்புகள் உள்ளன. ராணி எறும்பு, ஆண் எறும்பு. வேலைக்கார எறும்பு. என்பன அவை. ஒரு கூட்டில் ஒரு ராணி எறும்பு தான் இருக்கும். ஆண் எறும்புகள் சில இருக்கும். வேலைக்கார எறும்புகள் நிறைய இருக்கும். வேலைக்கார எறும்புகள் யாவும் பெண் எறும்புகளே. ஆனால் அவை முட்டை இடுவதில்லை. ராணி மட்டுமே முட்டையிடும். மற்ற எறும்புகளைவிட ராணி எறும்பு உருவத்தில் பெரியது. ராணி எறும்புக்கும் ஆண் எறும்புகளுக்கும் முதலில் இறக்கைகள் இருக்கும். ஆனால் பின்னர் அவை உதிர்ந்துவிடும். வேலைக்கார எறும்புகள்தாம் சமூகத்தில் எல்லா வேலைகளையும் பகிர்ந்துகொண்டு செய்கின் றன. சில இரை தேடும்; சில கூட்டில் இருந்து ராணியையும் குஞ்சுகளையும் பாது காக்கும்; மற்றும் சில, எதிரிகள் உள்ளே நுழையாதபடி கூட்டைப் பாதுகாக்கும். எல்லா வகைப் பூச்சிகளின் பிறப்பில் காண்பதுபோலவே எறும்பின் பிறப்பிலும் நான்கு நிலைகளைக் காணலாம். அவை முட்டை லார்வா, பியூப்பா, முதிர் பருவம் என்பன. எறும்புக்குப் பல கண் கள் ஒன்றாகச் சேர்ந்த கூட்டுக் கண்கள்