பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

70 ஏரிகள் - ஏவு படைக்கலம் இவர்களின் குழந்தைகள் பள்ளிக்குச் செல் கின்றனர். இவர்களுடைய உடை, உணவுப் பழக்கங்களும் மாறிவருகின்றன. ஏரிகள் : குளம், ஊருணிகளைப் பார்த்திருப்பீர்கள். இவை போன்ற மிகப் பெரிய நீர்நிலைகளுக்கு ஏரிகள் என்று பெயர். இவை இயற்கையாகத் தோன் றியனவாக இருக்கலாம்; அல்லது மனிதர் சுளால் சுட்டியனவாகவும் இருக்கலாம். பனிக்கட்டி உருகிய நீர், மழை நீர், ஆற்று நீர், ஊற்று நீர் முதலியவற்றால் ஏரிக ளுக்குத் தண்ணீர் வருகிறது. ஏரிகளில் நல்ல நீர் ஏரிகள் உண்டு. உப்பு நீர் ஏரிகளும் உண்டு. நல்ல நீர் ஏரிகளுக்கு ஒரு பக்கம் தண்ணீர் வந்து விழும்; மறுபக்கம் வழிந் தோடும். உப்பு நீர் ஏரிகளில் தண்ணீர் வந்து விழும்; ஆனால் அப்படியே தங்கி விடும். அதற்குப் போக்கு இராது. நீரில் கலந்து வரும் உப்பு ஏரியிலேயே தங்கிவிடு வதால் தண்ணீர் உப்புக் கரிக்கிறது. உப்பு நீர் ஏரியைக் கடல் என்றும் சொல்வது உண்டு. காஸ்ப்பியன் கடல், சாக்கடல், ஆரல் கடல், முதலியவை உப்பு நீர் ஏரிகளே. உப்பு நீர் ஏரிகளில் ஏரிகளில் மிகப் பெரியது காஸ்ப்பியன் கடல். இது சுமார் 4,40,000 சதுர கிலோமீட்டர் பரப்பு உடையது. இது ஆசியாவில் உள்ளது. மிகப் பெரியது நல்ல நீர் ஏரிகளில் சுப்பீரியர் ஏரி. இதன் பரப்பளவு 82,700 சதுர கிலோமீட்டர். இது வட அமெரிக் காவில் உள்ளது. உலகிலேயே மிக உயரத்தில் உள்ள ஏரி தென் அமெரிக்காவில் உள்ள டிட்டிக் காக்கா ஏரியாகும். கடல் மட்டத்தி லிருந்து 3,800 மீட்டர் உயரத்தில் இது ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஓர் ஏரி உள்ளது. அதிகத் தாழ்வாக உள்ளது சாக் கடல் என்ற ஏரியாகும். இது கடல் மட்டத்திலிருந்து 400 மீட்டர் தாழ்வாக இருக்கிறது. ஒரு காலத்தில் தீக் குழம்பு வெளியேறிய எரிமலையின் வாய் இப்போது ஓர் ஏரியாக இருக்கிறது. வட அமெரிக்காவில் உள்ள இந்த ஏரியை எரி மலை ஏரி என்று சொல்வார்கள். ஏரிகளால் பல தன்மைகள் உண்டு. நீர்ப்பாசனத்திற்கும், போக்குவரத்துக்கும் ஏரிகள் உதவுகின்றன. நல்ல நீர் ஏரியி லிருந்து குடி தண்ணீரும் கிடைக்கிறது. ஏரிகளில் உள்ள தாவரங்களிலிருந்து சாயப் பொருள் தயாரிக்கிறார்கள். ஏரி களில் பலவகை மீன்களும் இருக்கும். உல் லாசமாகப் படகு ஓட்டி மகிழ்வதற்கும், நீந்தி விளையாடுவதற்கும் ஏரிகள் ஏற் றவை. ஏவு படைக்கலம் (Missile) : போர் நடக்கும்பொழுது பகைவரின் விமானம் ஒரு நாட்டைத் தாக்க வருமல்லவா? அது பல கிலோ மீட்டர்களுக்கு அப்பால் வரும்பொழுதே, ராடார் என்னும் கருவியின் மூலம் அந்த நாட்டு வீரர்கள் அதைக் கண்டுகொள்கின்றனர். அதைத் தடுத்து அழிப்பதற்காக ஒருவகைப் படைக் அந்தப் கலத்தைச் செலுத்துகின்றனர். படைக்கலம் எதிரியின் விமானத்தையே குறியாகக் கொண்டு பறந்து செல்லுகிறது. விமானம், எத்திசையில் திரும்பினும் விடாமல் அதைத் துரத்திச் சென்று, இறுதி யில் அதனுடன் மோதுகிறது. விமானம் படைக்கலம் இரண்டும் வெடித்து அழிகின் றன. இவ்விதம் ஏவியவுடன், குறிப் பிட்ட ஒரு குறியை நோக்கிச் சென்று, அதைத் தாக்கி அழிக்கும் புதுவகைப் படைக்கலத்திற்கு ஏவு படைக்கலம் என்று பெயர். இந்தப் படைக்கலம் உருவத்தில் ஒரு விமானத்தைப் போல் அமைந்திருக்கும். இதை இயக்குவதற்கு ஓர் எஞ்சின் உண்டு. மேலும் இரண்டு இறக்கைகள், ஒரு வாஸ், திசை திருப்புவதற்கான சுக்கான் ஆகியவையும் இருக்கும். இது ஆள் இல் லாமலே பறக்கும். படைக்கலம் பறந்து கொண்டிருக்கும் பொழுதே, தரையி லிருந்து அதைத் தேவையான திசைக்குத் திருப்பலாம். இப் படைக்கலத்தின் முகப்பில் வெடிகுண்டு ஒன்றும் பொருத்தப் பட்டிருக்கும். படைக்கலம், எதிரியின் விமானத்தின் மீதோ, கட்டடத்தின் மீதோ மோதியவுடன் இவ்வெடிகுண்டு வெடித்து அதை அழிக்கிறது. சாதாரண வகைப் படைக்கலங்களை எதிரியை நோக்கிச் செலுத்திய பிறகு அவற்றின் போக்கைக் கட்டுப்படுத்த