இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
46600 ஓவியம் 93 அஜந்தா ஓவியம் வசந்தா ராகத்தைச சித்தரிக்கும் மேவார் ஓவியம் பண்டைக்காலத்தில் இந்தியாவில் ஓவியக்கலை மிக உயர்ந்த நிலையை எட்டியிருந்தது. தமிழ் நாட்டில் சிற்றண்ணல்வாயில் குகைகள், தஞ்சாவூர்ப் பெரிய கோயில் ஆகிய இடங்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கண்கவரும் வண்ண ஓவியங்களைக் காணலாம். அஜந்தா, எல்லோராக் குகை ஓவியங்கள் உலகப்புகழ்பெற்றவை. வட இந்தியாவில் மொகலாய மன்னர் காலத்திலும், ரஜபுத்திர மன்னர் காலத்திலும் பல அழகிய வியங்கள் எழுதப்பெற்றன.