பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புயல் புரோட்டோசோவா நாம் ஆறுகள் கடலில் போய்ச் சேரும் கழி முகப்பகுதிகளிலும், சில கடற்கரைகளி லும், கடல் நீரோட்டம் செல்லும் உப்பங் சுழிகள் காயல்கள் ஆகிய இடங்களிலும், பாலைவனங்களிலும் புதைமணல் உண்டா கிறது. புதைமணலுக்கு அடியிலுள்ள குழிகள் ஒரு மீட்டர் ஆழத்திலிருந்து நூற்றுக்கணக்கான மீட்டர் மீட்டர் வரை ஆழ முள்ளவையாக இருக்கும். ஆனால் இவற் றின் பரப்பளவு சிறியது. மற்ற மணல் பரப்புகளிளின்றும் புதை மணலை பார்த்தவுடனே வேறுபடுத்தி அறிய முடியாது. சதுப்பு நிலங்களிலும், பெரிய ஏரி குளங்களிலும் சில பகுதிகளில் புதை சேறு உண்டாகிறது. இது பார்ப்பதற்குத் தரை போலவே தோற்றமளிக்கும். இதுவும் புதைமணலைப் போலவே ஆபத்தானது. தமிழ்நாட்டில் அரியலூர்க் களிநிலங்களி லும், கோடிக்கரை, தூத்துக்குடி, எண்ணூர்க் காயல்களிலும் புதைசேறு காணப்படுகின்றது. தார் பாலைவனத்தில் புதைமணல் உள்ளது. புயல் : புயலினால் சேதம் விளைவது பற்றிச் செய்தித்தாள்களில் படித்திருப்பீர் கள். வாயுமண்டலத்தில் சிலவேளைகளில் திடீரென்று ஏற்படும் மாறுதல்களால் புயல், மழை, ஆலங்கட்டி மழை, பனிப் புயல் (த.சு.). தூசிப்புயல் முதலியவை உண்டாகின்ற றன. சமுத்திரங் வெப்பமண்டலத்திலுள்ள கனில் வெப்பக்காற்று அழுத்தம் குறைந்து மேல் நோக்கிச் செல்கிறது. தடக்காற்றினா லும் (Trade Winds), பூமியின் சுழற்சியின லும் இக்காற்று கழலத் தொடங்குகிறது. வெப்பக்காற்று உயரே குளிர்ந்த காற் றுடன் சேரும்போது ஓரளவு குளிர்ச்சி யடைகிறது. அப்பொழுது வெப்பமும் வெளிப்படுகின்றது. அதனால் மேலும் மேலும் வெப்பக்காற்று உறிஞ்சப்பட்டுச் சுழற்சி வேகம் மிகுந்து புயல் உருவாகிச் சீற்றத்துடன் வீசுகிறது. புயலின் வேகம் மணிக்கு 150 கிலோ மீட்டர் முதல் 320 கிலோமீட்டர் வரை இருக்கும். கடற்கரையை அடுத்துள்ள நகரங்களின்மீது புயலடிக்கும்போது பெரு மழை பெய்து உயிர்ச்சேதமும் பொருள் சேதமும் உண்டாகும். கடலில் மட்டும் இப்புயல் வீசினால், நீர் சுழல்வதினால் அது ஒரு தூணைப்போல (Water Spout) சுமார் 14 கிலோமீட்டர் உயரம்வரை பீறிட்டு எழும். பூமத்திய ரேகையை அடுத்து வெப்ப மண்டலத்திலுள்ள சமுத்திரங்களில் தான் பெரும்பாலும் புயல் உருவாகிறது. அட்லான்டிக் சமுத்திரமும், தெற்கு 15 பசிபிக் சமுத்திரமும், இந்திய சமுத்திரமும் புயல் உருவாகும் முக்கியப் பகுதிகளாகும். புயல் வீசக்கூடும் என்பதை முன்கூட்டியே அறிந்து நம்மை எச்சரிப்பதற்காக இன்று ராடார் (த.க.) போன்ற சாதனங்களும் செயற்கைக் கிரகங்களும் (த.க.) பயன படுகின்றன. புரோட்டோசோவா (Protozoa): உயி ரினங்களில் பலவகை உண்டு. சில உயிர்கள் யானை, திமிங்கிலம்போல் மிகப் பெரியவை. அமீபா (த.க.) போன்ற உயிரினங்கள் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு மிகமிகச் சிறியவை. இத்தகைய நுண்ணுயிர்கள் புரோட்டோசோவா என்னும் தொகுதியைச் சேர்ந்தவை யாகும். மிகச் சிறிய உருவத்தை மிகப் பெரிதாக்கிக் காட்டும் மைக்ராஸ்கோப் (த.க.) என்னும் கருவியின் உதவியில்லா பார்க்க இவற்றைப் இயலாது. பூமியில் முதன் முதலில் தோன்றிய உயிரினங்கள் இவையே என்று விஞ்ஞாளி கள் கருதுகிறார்கள். புரோட்டோசோலா மல் உயிரினத்தின் உடல் ஒரே உயிரணுவால் (த.க.) ஆனது. உயிர்ப்பிராணிகளுக்குரிய மூச்சு விடுதல், உணவைச் சீரணித்தல், கழிவுப்பொருள் வெளியேற்றுதல், இனப்பெருக்கம் செய்தல் முதலிய எல்லாச் செயல்களும் இந்த ஓர் அணுவுக்குள்ளேயே நடக்கின் றன. களாகப் இவ்வகை உயிரினங்கள் மிகவும் நுண் ணியவையாக இருந்தாலும், இவற்றில் சிலவற்றிற்கு மேல் ஓடு உண்டு. இத்தகைய ஓடுகள் பல இலட்சம் ஒன்றுசேர்ந்துதான் கடலில் சீமைச் சுண்ணாம்புத் திட்டு புரோட்டோ படிகின்றன. சோவா வகைகனில் ஒவ்வொரு உயிரும் இரண்டு அல்லது பல பகுதிகளாகப் பிரிந்து ஒவ்வொரு பிரிவும் ஒரு தனி உயிராக முதிர்ச்சியடையும். இவ்வாறு இவற்றின் இனம் பெருகுகிறது. புரோட்டோசோவாவில் சுமார் 30,000 வகைகள் உள்ளன. இவற்றுள் சில சுதந்தரமாக வாழ்க்கை நடத்துகின் றன. இவை நீரில் கரைந்துள்ன உணவைத் தம் உடலின் பரப்பிலிருக்கும் சிறு பள்ளங் களின் வழியாக உறிஞ்சி உயிர்வாழும். பிற. பிராணிகளின் உடலிலிருந்து தமக் குத் தேவையான உணவை எடுத்துக் கொண்டு வேறு சிலவகைகள் ஒட்டுண்ணி கனாக (த.சு.) வாழ்கின்றன. இன்னும் சிலவற்றின் உடலில் பச்சையக் கணிகங்கள் அல்லது நிறக்கணிகங்கள் (Chromotophores இருக்கின்றன. இவற்றின் உதவியால் பச்சை நிறத் இளவ, தாவரங்களைப்