பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புல்- புல்லுருவி புல்: ஆடு, மாடு போன்ற கால் நடைகள் புல்மேய்வதை நீங்கள் அறிவீர் கள். நமக்கு உணவாகும் நெல், கோதுமை, சோளம், பார்லி, கேழ்வரகு, கம்பு, தினை, வரகு. சாமை முதலிய தானியங்களை அளிக்கும் தாவர இனங்களும் புல் இனத் தைச் சேர்ந்தவையே. தானாக வளர்ந்த புல் இனங்களை மனிதன் மேலும்மேலும் மேம்படுத்தி, இத் தானியப் பயிர்களை உண்டாக்கினான். நமக்குப் பலவகைகளில் பயன்படும் மூங்கில், சுரும்பு ஆகியனவும் புல் இனத்தைச் சேர்ந்தவையே. புல் இனத்தில் ஆயிரக்கணக்கான வகை கள் உண்டு. உலகெங்கும் இவை வளர்கின் றன. புல் இனத்தில் பெரும்பாலானவை மிகச் சிறிதாக இருக்கும். சில புல் இனங் கள் ஓராண்டு காலத்திற்குட்பட்ட ஒரு பருவத் தாவரங்கள். மற்றும் சில இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வாழக் கூடியவை. மூங்கில் மட்டும் ஓங்கி வளர்ந்து நீண்டகாலம் வாழ்கிறது. புல்லின் தண்டு சாதாரணமாகக் குழாயாக இருக்கும். இலையின் அடிப் பாகம் உறைபோன்ற அமைப்பு உடையது. இது தண்டினைச் சுற்றி மூடியிருக்கும். இலைகள் நீளமாகவும் குறுகியதாகவும் உள்ளன. பூக்கள் மிகச் சிறியவை கொத்துக்கொத்தாகப் பூக்கும். கனிகள் அல்லது விதைகளே நாம் உண்ணும் தானியங்கள். புல்லின் தண்டிலிருந்து பல புதிய தண்டுகள் கிளைத்து கிளைத்து வளர்வதால் புல் படர்ந்து பரவுகிறது. நாம் லெட்டிவிட் டாலும் அல்லது கால்நடைகள் மேய்ந்தா லும் இத்தண்டுகள் முற்றிலுமாக கினியா புல் 17 அழிந்துவிடுவதில்லை. மீண்டும் இவை வளர்ந்து படர்கின்றன. கால்நடைகள் உண்ணும் புல்லின் தரத்தைப் பொறுத்து அவை கொடுக்கும் பாலின் அளவு உள் ளது. உயர்ந்த வகைப் புல்லைத் தின்னும் கால்நடைகள் கொழுத்து வளர்ந்து பால், இறைச்சி ஆகியவற்றை அதிகமாகக் கொடுக்கின்றன. இதற்காக, கால்நடை களுக்கெனச் சில புல் இனங்களை வளர்க் கின்றனர். கினியா புல், நாசியம்' புல், எருமைப் புல், நேப்பியர் புல், ரோட்ஸ் புல், கொழுக்கட்டைப் புல் முதலியன இவற்றுள் முக்கியமானளவ். புல் இனத் தாவரங்களால் நமக்கு இன்னும் பல நன்மைகள் உண்டு. பாய், கூடை, தொப்பி முதலியன முடையக் கோரை, மூங்கில் போன்ற சிலவகைப் புல் பயன்படுகிறது. காகிதம் செய்யவும் புல் பயன்படுகிறது. மண் அரிமானத்தைத் தடுக்கவும் நீர்நிலைகளின் கரையை வலுப் படுத்தவும் அருகு, நாணல் போன்ற புல் வகைகளை வளர்ப்பதுண்டு. புல்லுருவி : பிற தாவரங்களிலிருந்து சத்துப்பொருள்களை உறிஞ்சி உயிர்வாழும் செடி வகைகளில் ஒன்று புல்லுருவி புல்லு ருவிகள் மற்ற மரஞ்செடிகளில் வளர்ந்து அவற்றின் கிளைகளுக்குள் தம் வேர்களைச் செலுத்தி, அவற்றிலுள்ள நீரையும் உப்பு களையும் உறிஞ்சிக்கொள்கின்றன. புல்லுருவிகளில் 36 பிரிவுகளும் 600 இனங்களும் உள்ளன. எல்லா இனங்களும் பச்சையிலையுள்ள ஒட்டுண்ணிகளாகும் (5.5.). இவை மிதமண்டலத்திலும் அயனமண்டலத்திலும் மிகுதியாகக் கொழுக்கட்டைப் புல் நாசியம் புல்