பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

புறா - பூகோளம் 29 இவற்றுக்குப் புறவூதாக் கதிர்கள் என்று பெயர். புறயூதாக் கதிர்கள் பெருமாவில் தாக் கினால் நமக்குத் தீங்கு உண்டாகும். வெப்ப நாடுகளில் திறந்தவெளியில் வெயிலில் வேலை செய்பவர்களின் நிறம் மஞ்சளாக அல்லது கறுப்பாக இருப்பதற் கும் புறவூதாக் கதிர்களே காரணமாகும். சூரிய ஒளியில் தீண்ட நேரம் நிற்க வேண்டி யிருந்தால் புறவூதாக் கதிர்கள் தாக்கிச் சிலருடைய முகம் கன்றிச் சிவக்கும். இக் கதிர்களை அதிகமாகப் பார்ப்பதால் கண்ணுக்குக் கெடுதல் ஏற்படும். சூரியனிடமிருந்து வரும் புறவூதாக் சுதிர்களில் பெரும்பகுதியைப் பூமியைச் சுற்றியுள்ள வாயுமண்டலம் உறிஞ்சிக் கொள்கின்றது; எனவே நமக்குத் தீங்கு நேராதவாறு பாதுகாப்பு ஏற்படுகின்றது. மிகச் சிறிதளவில் புறவூதாக் கதிர்கள் தமக்கு நன்மை செய்கின்றன. மருத்துவத் துறையில் இக்கதிர்கள் பயன்படு கின்றன. விரைவில் புண்கள் ஆறவும். நமது உடலில் எலும்பு, பல் வளர்ச்சிக் காக வைட்டமின் Dயைச் சேர்க்கவும், தொற்று நீக்கியாகவும், இக்கதிர்கள் உதவு கின்றன. காசநோய், கணைநோய் (Rickets) சருமநோய்களுக்குப் புறவூதாக் கதிர் மருத் துவம் பயனளிக்கிறது. புறவூதாக் கதிர் கள் பட்ட பசுவின் பாலும், கோழியின் முட்டையும் மிகுந்த சத்துடையன என்று கண்டுபிடித்திருக்கிறர்கள். புற : வீட்டில் செல்லமாக வளர்க் கப்படும் பறவைகளுர் புருவும் ஒன்று. அழகான இச் சிறிய பறவை கட்டான உடல் பொருந்தியது. இதன் இறகுகள் பட்டுப்போன்று மென்மையாக இருக்கும். புறாக்கள் பல நிறங்களில் உள்ளன. முற்றி லும் வெள்ளை நிறமான புறக்களும் உண்டு. சின்னமாக சமாதானத்தின் புழுவைச் உலகெங்கும் சுருதுகிஞர்கள். புருக்களில் பல இனங்கள் உண்டு. துருவப்பிரதேசங்கள் தவிர உலகில் மற்ற எல்லா நாடுகளிலும் இவை வாழ்கின்றன. கோயில் கோபுரங்களிலும் கடைத்தெருக் கனிலும் காணப்படும் மாடப்புறாவை நீங்கள் பார்த்திருக்கலாம். இதன் உடல் சாம்பல் நிறமானது; கழுத்தில் பச்சையும் கருஞ்சிவப்பும் கலந்த அழகான இறகுகள் உண்டு. கால்கள் சிவப்பு நிறமானவை. மணிப்புற, தவிட்டுப்புற, பச்சைப்புழு என்பன புளுக்களில் வேறு சில இனங் களாகும். இவை உருவில் சற்றுச் சிறியன வாக இருக்கும். வீடுகளில் வளர்க்கப் படும் புழுக்களில் விசிறிவால் என்னும் ஆடும்புறா ஒன்று. சாதாரணப் புறக் வெள்ளைப் புறா விசிறிவால் புறா சுளுக்கு 12 வால் இறகுகளே உண்டு. ஆடும் புறாவுக்கு 40 இற்குவரை உள்ளன. இவற்றை விரித்து இது ஆடும்போது மிக அழகாக இருக்கும். தானியங்களும் விதைகளும் புருவின் உணவாகும். இரையைச் சேகரித்து வைத் துக்கொள்ளப் புருவுக்குத் தீனிப்பை உள்ளது. வேண்டியபோது இரையில் ஒரு பகுதியை இரைப்பைக்குக் கொண்டு சென்று செரிமானம் செய்துகொள்ளும். நீர் பருகுவதில் புறவுக்கும் கோழி போன்ற மற்ற பறவைகளுக்கும் ஒரு வேறு பாடு உண்டு. பிற பறவைகள் தம் அலகில் நீரை நிரப்பி, தலையைத் தூக்கி, நீரை உள்ளே செலுத்துகின்றன. ஆனால் புறா தலையைத் தூக்காமலே நீரை உறிஞ்சிக் குடித்துவிடும். ஆண்புழுனும். பெண்புறவும். இணை பிரியாமல் வாழ்கின்றன. இரண்டுமே அடைகாக்கின்றன. முட்டையிலிருந்து வெளிப்படும் குஞ்சுகள் கண்திறவாத நிலையில் இருக்கும். ஆண்புரு. பெண்புற இரண்டுமே குஞ்சுகளுக்கு உணவூட்டும். இவை தம் தீனிப்பையில் சுரக்கும் தயிர் போன்ற ஒரு பொருளையும் குஞ்சுகளுக்கு ஊட்டுகின்றன. புறாக்கள் நெடுந்தொலைவு பறக்கக் கூடியவை, ஓரிடத்திலிருந்து மற்றோரிடத் திற்குச் செய்தி அனுப்பப் புருக்களைப் பயன்படுத்துவதுண்டு. பூகோளம் (Geography) : பூமியின் மேற்பரப்பைப் பற்றி விரிவாகக் கூறுவது