பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 9.pdf/72

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

விளம்பரம்

சிலவகை விளக்குகள்

ரசாயனப்பொருள் பூசப்பட்டிருக்கிறது. இதனால் மின்சாரம் குழாயிலுள்ள வாயு வினூடே பாயும்போது ரசாயனப்பூச்சு களில் பட்டு நன்கு ஒளிருகின்றது. பலவகை வாயுக்கள் நிரம்பிய குழாய் விளக்குகளும் இன்று வழக்கிலுள்ளன.

இன்று மின்சார விளக்குகளைப் பெரிதும் பயன்படுத்தினாலும், கோயில்களிலும் திருமணம், பண்டிகை முதலிய விழாக் களிலும் எண்ணெய் விளக்குகளையும், மெழுகுவத்தி விளக்குகளையும் பயன் படுத்துகிறார்கள். இந்தியாவில் செய்யப் படும் பித்தளை, வெண்கலம், வெள்ளி விளக்குகள் அழகிய வேலைப்பாடு உடையவை.

விளம்பரம் : செய்தித்தாள்களில் செய்திகளோடு பலவகையான விளம்ப ரங்களையும் பார்க்கிறோம். இந்த விளம் பரங்களின் மூலம் செய்தித்தாள்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. விளம் பரங்கள் இல்லாவிட்டால் செய்தித்தாள்களின் விலை அதிகமாக இருக்கும்.

செய்தித்தாள்களிலும், பத்திரிகைகளி லும் மற்ற இடங்களிலும் வெளியிடப் படும் விளம்பரங்களின் மூலமாகப் பல விவரங்களைத் தெரிந்துகொள்கிறோம். ஒரு பொருளைப் பற்றியும் அதை எங்கே வாங்கலாம் என்பது பற்றியும் இன்னும் பல்வேறு விவரங்களையும் தெரிந்துகொள்கிறோம். வீடுகள், மனைகள் வாகனங்கள், பல்வேறு சாதனங்கள், கருவிகள் முதலியவற்றை விற்போரும் வேண்டுவோரும் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்கின்றனர்.

விளம்பரம் செய்வதற்குச் செய்தித் தாள்கள், பத்திரிகைகள் மட்டுமின்றி வேறு பல சாதனங்களும் உள்ளன. முக்கிய சாலைகளின் ஓரங்களில் பெரிய பலகைகளை நிறுத்தி அவற்றில் விளம்பரம் எழுதியிருப்பதைப் பார்க்கலாம். விளக்குக் கம்பங்களில் விளம்பரத்திற்கென சிறு பலகைகளைப் பொருத்தியிருப்பார்கள்.

பஸ், ரெயில் முதலிய போக்குவரத்து சாத னங்களில் உள்ளேயும் வெளியேயும் விளம்பரப் பலகைகள் இருக்கும். சுவ ரொட்டிகளும் இன்று பெருமளவில் ஒட்டப்படுகின்றன. இரவு நேரத்தில் வண்ண விளக்குகளால் பல நிறங்களில் எழுத்துகளையும் கோலங்களையும் உரு வாக்கிக் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் அமைந்த விளம்பரங்களைப் பெரிய நகரங்களில் காணலாம். வானொலியில் விளம்பரங்கள் ஒலிபரப்பப் படுவதை நாம் நாள்தோறும் கேட்கிறோம். சினிமா அரங்குகளிலும் பலவகை விளம்ப ரங்களை நாம் பார்க்கிறோம். இன்று எந்த ஒரு பொருளுக்கும் விளம்பரம் தேவையாக இருக்கிறது. ஒருவர், புதிதாக ஒரு சோப்பைத் தயாரித்து விற்பனை செய்ய விரும்பினால் அதன் சிறப்பைப் பலருக்கும் எடுத்துச் சொல்லவேண்டும். அவ்வாறு விளம்பரம் செய்யாவிட்டால், அவர் தயாரிக்கும் சோப்பைப் பற்றித் தெரிந்துகொள்ள வாய்ப்பு இருக்காது. அந்த சோப்பு அதிக அளவில் விற்பனையுமாகாது.

மக்களிடையே ஒரு பொருள் நன்கு பரவி நல்ல மதிப்பைப் பெற்றிருக்கலாம். ஆனால் வேறு தயாரிப்பாளர்கள், போட்டி யாக அதுபோன்ற பொருளைப் புதிதாகத் தயாரித்து, மக்களின் கவனத்தை ஈர்க்க லாம். எனவே, ஒரு பொருள் எப் பொழுதும் மக்கள் மனத்தில் நிலைத்தி ருக்கத் தொடர்ந்து விளம்பரம் செய்து கொண்டே இருப்பது அவசியமாகிறது. விற்பனையைப் பெருக்க விளம்பரம் மிகவும் இன்றியமையாதது.

இன்று தயாரிப்பாளர்கள் விளம்பரங் களைத் தாமே செய்வதில்லை. இதற்கெனத் தனி நிறுவனங்கள் உள்ளன. செய்தித் தாள், வானொலி முதலிய பல்வேறு விளம்பர சாதனங்களில், ஒரு பொருளுக்கு எவையெல்லாம் ஏற்றவை என்று ஆராய்ந்து அவற்றில் இந்நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன. விளம்பரத்திற்