பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேண்டாம் இந்தச் சம்பந்தம்.
வெட்கக் கேடு! போய்வாரோம் !’

என்றே பெண்ணின் தாயாரும்
ஏளன மாகக் கூறியபின்,

அருமைப் பெண்ணைத் தன்னுடனே
அழைத்துக் கொண்டு போனாளாம்.

* * *


‘வகைவகை யான சாப்பாடு
வயிறு முட்டத் தின்றிடலாம்’

என்றே எண்ணி வந்தவரும்
ஏமாற் றத்துடன் திரும்பினராம் !

9