பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/110

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


“ஐயோ, குளிர்மிக வீசுவதால்-இந்த
ஆண்மயில் மேனி நடுங்குதம்மா !
‘ஐயா, உதவுங்கள்’ என்கிறதோ-மயில் ?
ஆமாம், அதைத்தான் உரைக்கிறது.”

எண்ணினன் இப்படி மன்னனுமே-உடன்
எடுத்தனன் போர்த்திய போர்வையினை.
சென்றனன் அந்த மயிலருகே-உள்ளம்
திருப்தி அடைந்திடப் போர்த்தினனே,

உடலும் மழையால் குளிர்ந்திடவே-அவன்
உள்ளம் கொடையால் குளிர்ந்ததுவே,
கொடையில் சிறந்தோன் பெயர்சொல்லவா ? -மக்கள்
கொண்டாடும் பேகன் அவனல்லவா!


பேகன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். பழனி மலையையும் அதையடுத்த ஊர்களையும் ஆண்டு வந்தவன்.

108