பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தம்பி, நீபோய் வந்திடு.
தங்கி இருக்கி றே’னென

அரச மரத்தின் அடியிலே
அமர்ந்தார், தொந்திப் பிள்ளையார்.

காற்ற டித்த ஓசையில்
காது கேளாக் குமரனும்,

சிறிது தூரம் சென்றுதான்
திரும்பிப் பார்த்தான், அண்ணனை-

அங்கும் இங்கும் பார்த்தனன்;
அண்ணன் வரவே இல்லையாம்!

உச்சி மலையில் ஏறினன்;
உற்று எங்கும் நோக்கினன்.

காண வில்லை அண்ணனை
கண்ணுக் கெட்டும் வரையிலும்.

மலையின் மேலே நின்றிடின்
மரத்தின் கீழே தெரியுமோ ?

பார்த்துப் பார்த்து உச்சியில்
பாவம், கந்தன் நிற்கிறான்,

காத்துக் காத்துக் கணபதி
காற்று வாங்கும் காட்சிபார்!

14