பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கூறிக் கொண்டே இப்படிக்
குரங்கு ஓடி மரத்திலே
ஏறிக் கொள்ள லானது;
எழும்பி, எழும்பிக் குதித்தது.

ஆட்டம் ஆடிக் குதிக்கையில்
அங்கே கிளையில் சட்டையும்
மாட்டிக் கொண்டு விட்டது !
வலிந்து குரங்கு இழுத்தது.

இழுத்து, இழுத்துப் பார்த்துமே
எடுக்க முடிய வில்லையே !
கழுத்து நொந்து போனது;
கர்வம் ஒடுங்க லானது.

‘மரங்கள் தம்மில் தொத்தியே
மகிழ்ச்சி யோடு தாவிடும்
குரங்கே நானும் என்பதைக்
கொஞ்ச மேனும் எண்ணிலேன்.

மாட்டிக் கொண்டேன் சட்டையை
மனிதர் போல, ஆதலால்,
மாட்டிக் கொண்டு தவிக்கிறேன்.
வந்து உதவும், நண்பரே’

34