பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/66

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அழகும் விடுதலையும்

‘என்னை ஏனோ அழகாக
ஈசன் படைக்க வில்லை’யென
எண்ணி, எண்ணி ஒருகாக்கை
ஏங்கிச் சுற்றித் திரிகையிலே,

கூட்டில் அழகிய கிளியொன்றைப்
போட்டு அடைத்து, ஒருபையன்
வாட்டி வதைக்கக் கண்டதுவே;
மனத்தில் வருத்தம் கொண்டதுவே.

‘அழகாய் என்னைப் படைத்திருந்தால்,
அடியே னுக்கும் இக்கதிதான்.
அழகைக் காட்டிலும் விடுதலையை
அளித்தார் ஆண்டவன்’ என்றதுவே!

64