பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-2.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அன்று முழுதும் பட்டினிதான்.
'அந்தோ, இப்படி ஆனதுவே:
என்னே காரணம்?' என்றவனும்
எண்ணிப் பார்த்தான்; புரிந்ததுவே.

அந்த வருடம் லீப்வருடம்.
அதனால் ஒருநாள் அதிகமன்றோ?
எந்த மனைவியின் முறையென்றே
எவரும் அறியா திருந்தனராம்!



26