இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எத்திசையும் சுற்றிக் காற்றொருநாள்-அங்கு
எமனைப் போலவே வந்ததடா!
எத்தனை யோஉயிர் மாண்டிடவே-மிக்க
இன்னல் புரிந்துமே சென்றதடா!
எண்ணரும் உயிர்கள் எத்தனையோ-அதில்
இன்புற்ற வாழ்வினை நீத்தனவே.
கண்ணினைப் போன்றநம் ஆலமரம்-அந்தக்
கணக்கில் ஒன்றெனச் சேர்ந்ததுவே!
வேரற்று அம்மரம் வீழ்ந்ததுவே-பெரும்
வீரனைப் போலக் கிடந்ததுவே.
ஊரினர் யாவரும் கூடிவந்தே-
அதன் உன்னத நன்மையைப் பேசினரே.
அத்தனை மக்களும் வாடினரே -'இது
ஐயோ போனது!'என்றனரே.
இத்தலம் விட்டே போய்விடினும்-
அது எல்லார் உள்ளத்தும் நின்றதுவே!
28