பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-2.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உண்மை உரைத்தேன்; ஆனாலும்,
என்னை நம்பா திருந்ததுஏன்?

கவனக் குறைவே இத்தனைக்கும்
காரணம் என்பதை நன்குணர்ந்தேன்.

'சத்தியம் பேசும் மனிதனுக்குத்
தகுந்த கவனமும் வேண்டு' மெனக்

காந்தித் தாத்தா சொன்னமொழி
காதில் ஒலித்தது, அச்சமயம்.

31