பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-2.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அளித்திட வேண்டும் இலவசமாய்.
அனைவரும் விரும்பிப் பெற்றிடுவார்.

இலவச மாகக் கொடுக்கையிலே
எவர்தான் வேண்டாம் என்றிடுவார்?

இப்படி அவரும் எண்ணினரே.
இதற்குள் வேறோரு சங்தேகம்.

'படத்தைச் சும்மா வைத்துவிடின்
பாழாய்ப் போகும். ஆகையினால்,

அவற்றிற் கெல்லாம் கண்ணாடி
அழகாய்ப் போட்டே நம்செலவில்

கடைகளுக் கெல்லாம் கொடுத்திடலாம்.
கருத்தாய் மாட்டி வைத்திடுவார்.’

என்றே அவரும் எண்ணினரே;
ஏற்பா டுகளும் செய்தனரே,

திசைகள் தோறும் ஆள்அனுப்பி
தெருவில் உள்ள கடைகளுக்குப்

படங்கள் கொடுக்கச் செய்தனரே;
பணத்தை நீர்போல் இறைத்தனரே.

40