பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கைவளை வளையற் காரர்
எடுத்திடக் களிப்பார் பெண்கள்;
கைவழி வளையை மாட்ட,
உடலெலாம் நெளித்துக் காட்டி,
மைவிழி நீரைச் சொட்ட
வருந்துவார் வளைய லெல்லாம்
கையினில் நுழைத்த பின்னர்
அவர்காட்டும் களிப்பைப் பாரீர்! 3




88 ♦ கவிஞர் வாணிதாசன்