இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மூவர் சேர்ந்து பள்ளிக்கே
முணுமு ணுத்து நடந்தார்கள்;
மூவரும் வழியில் நின்றார்கள்;
மட்டம் போட முயன்றார்கள்!
1
பெரிய மரத்து நிழலிலே
பேசிச் சிரிக்கும் வேளையிலே
கரியால் இழுத்த கோட்டைப்போல்
கட்டை எறும்புகள் சென்றனவே!
2
‘எங்கே ஊர்ந்து போகின்றீர்?
இருங்கள், எம்மோ டாடிடலாம்!
தங்கிப் பேசி மகிழ்ந்திடலாம்!
சற்றே இருங்கள்!’ என்றார்கள்.
3
142 ♦ கவிஞர் வாணிதாசன்