இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கதைசொல் லட்டுமா? தம்பி! – நல்ல
கதைசொல் லட்டுமா? தம்பி!
பதைத்துத் துடித்தே அருகில் வந்து
பார்க்காமல் எங்கோ பார்க்கிறாய் தம்பி!–
காதை இப்படித் திருப்பு! – தம்பி!
கண்ணை இப்படித் திருப்பு!
பாதிக் கதையைத் தொடங்கு முன்னே
பறந்தால் எப்படி நடக்கும்?
கதையைச் சொன்னால், ‘ஊம்ஊம்’ கூட்டிக்
கதையைத் தூண்ட வேண்டும்!
புதிய புதிய கேள்வி கேட்டுப்
புத்தி கற்க வேண்டும்!
கோணி நாணிக் குந்தி யிருந்தால்
கூறு வதுநான் எப்படி?
ஆணிப் பொன்னே! அருகில் வந்தே
அமர்ந்து கேள்நீ இப்படி!
குழந்தை இலக்கியம் ♦ 147