பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/177

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
74

ன்னரும் நாடு தமிழ்நாடே!
உலகிற் கெல்லாம் பழநாடே!

தென்னை செந்நெல் விளைநாடே!
தீஞ்சுவைக் கன்னல் நிறைநாடே! 1

தாயை ஈன்ற தமிழ்நாடே!
தம்பி உனது தாய்நாடே!
பாய்புலித் தந்தைப் பொன்னாடு!
பாட்டி பிறந்த தமிழ்நாடு! ! 2

முல்லை பூத்த மலர்க்காடும்,
முன்றில் இருண்ட உன்வீடும்,
கொல்லை உழுத உன்மாடும்,
குளிர்ந்த நிழலும் தாய்நாடே! 3

ஆர்கடல் உலகப் பெருவிளக்காம்!
அன்னை நாடு தாய்நாடு!
கார்இருள் ஒட்டும் விண்விளக்காம்!
கடற்கரை ஓரச் சுழல்விளக்காம்!4


160 ♦ கவிஞர் வாணிதாசன்