பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11

லையிற் பிறந்து வரும்ஆறே!
வழியில் எதைஎதைப் பார்த்துவந்தாய்?
மலையில் இழிந்து வருகையிலே
மலையின் இடுக்கைப் பார்த்தாயோ?1

மலையிற் பிறந்து வரும்ஆறே!
வழியில் எதைஎதைப் பார்த்துவந்தாய்?
குலைகுலை யாகப் பொற்கொன்றைக்
குளிர்மலர் கொண்டு வந்தாயோ?2

மலையிற் பிறந்து வரும்ஆறே!
வழியில் எதைஎதைப் பார்த்துவந்தாய்?
கலையோ டாடும் பெண்மானின்
காட்டைக் கடந்து வந்தாயோ?3


20 ♦ கவிஞர் வாணிதாசன்