பக்கம்:குழந்தை இலக்கியம்.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15

விண்ணை இடிக்கும் மேல்மாடி!
வெளியில் இருக்கும் ஆளோடி!
கண்ணைக் கவரும் முன்வாயில்!
கதவுக ளெல்லாம் பொன்சாயல்!
திண்ணை எல்லாம் தெருப்புழுதி!
செம்மண் கூட்டி இடையெழுதி
வண்ணஞ் செய்த பெருவிடு!
வாயிற் படியோ புலிக்கூடு! 1

தன்னில் ஓடிப் பகலிரவில்
சளைக்கா தோடும் பெருங்குரலில்!
செந்நெல் விளையும் நிலமில்லை!
தீம்பழம் விளையும் தோப்பில்லை!
பொன்னை விளைக்கும் பெருங்கடைகள்!
போக்கு வரத்தோ பெருந்தடைகள்!
மன்னி நிலைத்தே என்றென்றும்
மடியைப் பறிக்கும் அன்றன்றும்! 2


24 ♦ கவிஞர் வாணிதாசன்