இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தாய் செய்த தவம்
7
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ ! ஆரடித்து நீஅழwhய், அஞ்சனக்கண் மைகரைய ! மையும் கரைந்து மதிமுகம் வாடினhலே செய்யுமொரு காரியங்கள் தோணுமோ சித்தடியே !
இந்தக் குழந்தைக்காக அவள் எவ்வளவு காலம் காத்திருந்தாள் !“இத்தனை நாள் எங்கே இருந்தாய் ?” என்று குழந்தையையே கேட்கிறாள். குழந்தை பதில் சொல்கிறதாம் ! அந்தப் பதிலையும் தாயே தாலாட்டுப் பாட்டில் பாடுகிறாள்.
- பூங்கிளியே பூங்கிளியே
- இத்தனைநாள் எங்கிருந்தாய் ?
- மாசி மறைந்திருந்தேன்
- மகதேவர் பின் இருந்தேன்.
- மகதேவர் பின் இருந்தேன்
- மாஞ்சோலைக் குள்ளிருந்தேன்.
- திங்கள் மறைந்திருந்தேன்
- தேவர்கள் பின்இருந்தேன்
- தேவர்கள் பின்இருந்தேன்
- தேடியபோ திங்குவந்தேன்.
- பூங்கிளியே பூங்கிளியே
அவள் பலபல தவம் செய்து தேடினாள். செய்த தவத்தைச் சொல்லுகிறாள்
- சித்தடியே சித்தடியே-நான்
- செய்ததவம் நீகேளாய்
- சித்தடியே நீபிறக்க-நான்
- செய்ததவம் மெத்த உண்டு
- அம்புலியை வேண்டி
- அரையர் தமைவேண்டிச்
- சித்தடியே சித்தடியே-நான்