இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8
குழந்தை உலகம்
- சந்திரரை வேண்டிச்
- சரஸ்வதியைத் தான் வேண்டித்
- சந்திரரை வேண்டிச்
தவம் செய்தாளாம். தலயாத்திரை செய்து தீர்த்தங்களாடிப் பெற்ற குழங்தை அது.
- சீரங்க மாடித் திருப்பாற் கடலாடி
- மாமாங்க மாடி மதுரைக் கடலாடிக்
- தைப்பூச மாடித் தவம் பெற்று வந்தகண்ணோ !
தென் பாண்டி காட்டிலே குற்றாலமும் குமரித்துறையும் விசேஷமான இடங்கள். அந்த நாட்டுப் பெண் ஒருத்தி, தான் ஆடிய தீர்த்தங்களைச் சொல்கிறாள் :
- வண்டடையுஞ் சோலை மழையடையுங்
- குற்றாலம் குற்குல மாடிக் குமரித் துறையாடிப்
- பால்மணக்குங் குற்றாலம் பழமணக்கும் தென்காசி
- வண்டடையுஞ் சோலையிலே வந்துதித்த மாமயிலோ !
- சங்கர லிங்கம் ததுக்கோடி ராமலிங்கப்
- பூர்வத்து லிங்ககதைப் பூசிக்க வந்த கண்ணோ !
திருச்செந்தூர் முருகக் கடவுளுக்குப் பிரார்த்தனை செய்து குழந்தை பெற்றதை ஒரு தாய் சொல்கிறாள்.
- காணிக்கை நேர்ந்தேன் கைந்நிறைந்த பொன்நேர்ந்தேன்
- மாணிக்கம் நேர்ந்தேன் மணிக்குழந்தை வேணுமென்று
- பரத்திமகள் தெய்வானை பத்தினியாள் இங்கிருக்கக்
- குறத்தி மகள் மையல்கொண்டு குறவேசம் பூண்டாரோ
- வெள்ளிக் குதிரையிலே-சுப்பையா வேட்டைமுகம் போகையிலே :::அள்ளிப் பணங்கொடுத்து ஆண்குழந்தை தந்தாரோ!
- கந்தா குமராஉன் கடற்கரையில் தானம்பண்ணி
- இந்தா குழந்தையென்று ஏந்தினும் இரண்டு கையும்.
***