பக்கம்:குழந்தை உலகம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

குழந்தை உலகம்



சந்திரரை வேண்டிச்
சரஸ்வதியைத் தான் வேண்டித்

தவம் செய்தாளாம். தலயாத்திரை செய்து தீர்த்தங்களாடிப் பெற்ற குழங்தை அது.

சீரங்க மாடித் திருப்பாற் கடலாடி
மாமாங்க மாடி மதுரைக் கடலாடிக்
தைப்பூச மாடித் தவம் பெற்று வந்தகண்ணோ !

தென் பாண்டி காட்டிலே குற்றாலமும் குமரித்துறையும் விசேஷமான இடங்கள். அந்த நாட்டுப் பெண் ஒருத்தி, தான் ஆடிய தீர்த்தங்களைச் சொல்கிறாள் :

வண்டடையுஞ் சோலை மழையடையுங்
குற்றாலம் குற்குல மாடிக் குமரித் துறையாடிப்
பால்மணக்குங் குற்றாலம் பழமணக்கும் தென்காசி
வண்டடையுஞ் சோலையிலே வந்துதித்த மாமயிலோ !
சங்கர லிங்கம் ததுக்கோடி ராமலிங்கப்
பூர்வத்து லிங்ககதைப் பூசிக்க வந்த கண்ணோ !

திருச்செந்தூர் முருகக் கடவுளுக்குப் பிரார்த்தனை செய்து குழந்தை பெற்றதை ஒரு தாய் சொல்கிறாள்.

காணிக்கை நேர்ந்தேன் கைந்நிறைந்த பொன்நேர்ந்தேன்
மாணிக்கம் நேர்ந்தேன் மணிக்குழந்தை வேணுமென்று
பரத்திமகள் தெய்வானை பத்தினியாள் இங்கிருக்கக்
குறத்தி மகள் மையல்கொண்டு குறவேசம் பூண்டாரோ
வெள்ளிக் குதிரையிலே-சுப்பையா வேட்டைமுகம் போகையிலே :::அள்ளிப் பணங்கொடுத்து ஆண்குழந்தை தந்தாரோ!
கந்தா குமராஉன் கடற்கரையில் தானம்பண்ணி
இந்தா குழந்தையென்று ஏந்தினும் இரண்டு கையும்.

***

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/17&oldid=1047133" இலிருந்து மீள்விக்கப்பட்டது