ஆர் அடித்தார்?
11
ஆரிரரோ!” என்று தாலாட்டை ஆரம்பித்துவிடுகிறாள். கை அசைகிறது; தொட்டில் அசைகிறது. தாயின் நா அசைகிறது; பாட்டு வருகிறது. அந்த மோகன கீத வலையிலே சிக்கிய குழந்தை தன்னை மறந்து தூங்கத் தொடங்குகிறது.
தாய் பாடும் தாலாட்டில் குழந்தையின் அழுகையைப் பற்றிய விசாரணை வருகிறது. விசாரணை வெறும் போலிதான். தாலாட்டுக்குப் பொருத்தமான விஷயம் வேண்டுமே! “குழந்தையை ஆர் அடித்தார்கள்? ” என்று கேள்வி மேல் கேள்வி கேட்கிறாள் தாய்.
- ஆராரோ ஆராரோ ஆரிரரோ ஆராரோ
- ஆரடித்து நீஅழறாய் அஞ்சனக்கண் மைகரைய!
- கண்ணை அடித்தாரார்? கற்பகத்தைத் தொட்டார்ஆர்?
பாட்டி அடித்திருப்பாளோ! சே சே! அவள் அடிக்க மாட்டாளே. தினந்தோறும் குழநதைக்கு ஆசையோடு பாலூட்டுபவளாயிற்றே. அவளா அடிப்பாள்? அத்தை அடித்தாளோ ? சோற்றைப் பிசைந்து நிலாக் காட்டி, ஊட்டும் அன்புடையவளாயிற்றே! அவள் தன் அமு தூட்டும் கையாலே அடிப்பாளா ?-சரி, மாமன் அடித்தானோ? தனது செல்வ மருமானை மகிழ்த்தெடுக்கும் கையா அடிக்கும் அண்ணன் ? அணைத்தெடுக்கும் கையாலே அவன் அடிக்க நியாயம் இல்லை.
- பாட்டி அடித்தாளோ, பால்ஊட்டும் கையாலே?
- அத்தை அடித்தாளோ, அமுதூட்டும் கையாலே?
- மாமன் அடித்தானோ, மகிழ்ந்தெடுக்கும் கையாலே?
- அண்ணன் அடித்தானுே, அணைந்தெடுக்கும் கையாலே!
பின்னே ஆரடித்திருப்பார்கள் ஆராயிருந்தாலும் சொல்.