பக்கம்:குழந்தை உலகம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

குழந்தை உள்ளம்



அடித்தாரைச் சொல்லியழு.
ஆக்கினைகள் பண்ணிவைப்போம்.
தொட்டாரைச் சொல்லியழு,
தோள்விலங்கு போட்டு வைப்போம்.

அடித்தவர்களேச் சும்மா விடுவாளா? என்ன என்ன தண்டனை விதிப்பாள் தெரியுமா ?

அடித்தாரைச் சொல்லியழு
ஆக்கினைகள் பண்ணி வைப்போம்.
தொட்டாரைச் சொல்லியழு
தொழுவில் கடாசிவைப்போம்.
மண்ணுல் விலங்குபண்ணித்
தண்ணீரில் போட்டுவைப்போம்.
வெண்ணெயால் விலங்குபண்ணி
வெய்யிலிலே போட்டுவைப்போம்.
நாக்கை அறுத்துவைப்போம்
நகரைவிட்டு ஓட்டிவைப்போம்.
பல்லைப் பிடுங்கிவைப்போம்
பட்டணத்தில் ஒட்டிவைப்போம்.
கண்ணே அடித்தார்ஆர்,
கண்மணியைத் தொட்டார்ஆர்?
பொன்னை அடித்தார்ஆர்,
பூங்கிளியைத் தொட்டார்ஆர்?

ஆரோ அடித்து விட்டார்கள். குழந்தைக்குக் கண்ணீர் பெருகுகிறது. தாய் கற்பனையினால் குழந்தையின் கண்ணீரை வெள்ளமாக வருணிக்கிறாள். கண்ணிர் ஆறாய்ப் பெருகி ஓடிக் குதிரை குளிக்கவும் வழிப்போக்கர் காலலம்பவும் சென்று மரங்களுக்குப் பாய்கிறதாம்!

ஆரடித்த கண்ணீர் ஆறாய்ப் பெருகிறதே!
தாயடித்த கண்ணீர் தண்ணீராய் ஒடறது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/21&oldid=1047195" இலிருந்து மீள்விக்கப்பட்டது