இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நிலாப் பாட்டு
29
- அம்ம அம்ம பூச்சி சின்னக் கிண்ணி தேச்சி
- இன்னம் கொஞ்சம் சோச்சி பின்னும் கொஞ்சம் பாச்சி
- எல்லாம் செரித்துப் போச்சா ? இன்னம் பெரு மூச்சா ?
- நில்லு உண்ட தாச்சா நீயே பெரும் பாச்சா !
குழந்தையைத் தட்டிக் கொடுத்து, என்ன கொடுத்தாலும் தின்னும் பிள்ளை என்று ஒரு தாய் பாடுகிறாள்.
- தத்தாங்கி தத்தாங்கி தட்டும் பிள்ளை
- தயிரும் சோறும் தின்னும் பிள்ளை
- அப்பம் சுட்டாலும் தின்னும் பிள்ளை
- அவல் இடித்தாலும் தின்னும் பிள்ளை !
சற்று வயசான குழங்தைகள் நிலாச்சோறு சமைக்கும்போது பாட்டுப் பாடுவார்கள். சமையல் செய்யும் போது என்ன என்ன செய்வார்களோ அவற்றையெல்லாம் வரிசையாகச் சொல்லிப் பாடி அந்தக் கற்பனை விருந்தை நடத்துவார்கள்.
- அரிசியைக் குத்து முன்னே அரித்துக் கழுவு பின்னே
- உலையில் அரிசி போடு உடனே மேலே மூடு
- கொதித்து வந்தபின் வடித்துக் கொட்டி ஆற்றி எடுத்துக்
- கத்திரிக் காயை அரிந்து காரம் புளிப்புத் தெரிந்து
- உப்பும் மசாலும் போட்டு ஒத்தி ருக்கக் கூட்டு
- வெந்த பின்னே தாளித்து விரித்து இலையில் அமைத்து
- யாவருங் கூடிப் புசிப்போம்! இன்ப மாக வசிப்போம் !
நிலாவைப் பார்த்துக் கேள்வி கேட்பதாகவும் அதற்கு அது விடை சொல்வதாகவும் சில பாட்டுக்கள் உண்டு. பணம் சேர்ப்பதும், மாடு வாங்குவதும், வீடு மெழுகுவதும், பிள்ளை பெறுவதும், பிள்ளையின் விளையாட்டைக் கண்டு இன்புறுவதுமாகிய காட்சிகளைப் பாட்டிலே தொடர்புபடுத்திப் பாடுவார்கள்.