இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
42
குழந்தை உலகம்
தால், குழந்தைக்கு மிக்க ஆனந்தம் உண்டாகும். அப்போது படுத்திருப்பவர் பாடுவார். ராகம் இல்லாத பாட்டு இது.
தென்ன மரத்திலே ஏருதே
தேங்காயைப் பறிக்காதே
பனை மரத்திலே ஏருதே
பனங்காயைப் பறிக்காதே
மா மரத்திலே ஏருதே
மாங்காயைப் பறிக்காதே!
இந்தக் கேள்விகளுக்குக் குழந்தை இல்லை, இல்லையென்று பதில் சொல்லும். பிறகு,
ஆற்றிலே விழுகிறாயா
குளத்திலே விழுகிறாயா ?
என்று கேட்பார். குழந்தை ஏதாவது ஒன்றைச் சொல்லும். பெரியவர் காலிலிருந்து குழந்தையை ஜிவ்வென்று மெல்லத் தூக்கி எறிந்து தரையில் வந்து நிற்கும்படி செய்வார்.