இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
26
குழந்தைச் செல்வம்
மாணிக்க மூக்கழகும் - மரகத
வர்ண வடிவழகும்
காணக்கண் ணாயிரந்தான் - இருப்பினும்,
கண்டு முடிந்திடுமோ?
6
கத்திரி போலவெட்டிக் - கனியினைக்
கௌவி யெடுத்தோடச்
சித்திர வாயளித்த - கடவுள்
திருவருள் சற்றோ? அம்மா!
7
சாய்ந்து தலைவணங்கி - இனிய
தமிழைநீ கற்குமுறை,
ஆய்ந்த புலவருமே -எழுதி
அயர்ந்துகை சோர்வார், அம்மா!
8
பறக்கச் சிறகிருந்தும் - மரக்கிளை
பற்றிநீ ஏறுவதேன்?
திறத்தை உலகினுக்கு - மிகவும்
தெரிவிக்கவோ? கிளியே!
9
காட்டுத் தினைக்கதிரை - பறித்து நீ
கண்டித் தருந்தாமல்,
கூட்டுக் கெடுத்தோடும் - குறிப்பெது
கூறுவையோ? கிளியே!
10
ஒற்றை யொருகாலில் - நின்றுகனி
உண்ணும் அறியவித்தை
கற்றதும் யாவரிடம் - அவரை நீ
காட்டுவையோ? கிளியே!
11