இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
28
குழந்தைச் செல்வம்
மாணிக்கச் செப்பினிலே - அமுதை
வடித்துச் சுவைபெருக்கி,
பேணி யுனக்களித்த - பிரமன்
பெரியன் பெரியன், அம்மா!
18
சின்னஞ் சிறுபள்ளியில் - உனக்கொரு
சிங்காரப் பெஞ்சுமிட்டுத்
தின்னக் கனியளித்துப் - பாலபாடம்
செப்புவன் வா, கிளியே!
19
கண்ணுக் கினிமையாகி - என திரு
காதும் குளிரச்செய்யும்
வண்ணப் பசுங்கிளியே!-குயிலும் உன்
மாதவஞ் செய்ததுண்டோ?
20
பாலுக்குச் சீனியைப்போல் - பசுந்தமிழ்ப்
பாடலுக் கின்னிசைபோல்,
சோலைக்குப் பைங்கிளியே! - உனது
துணையும் இனிதே அம்மா !
21
உள்ளக் களிப்பெழுந்து - வெளியில் வந்து
உன்னுருக் கொண்டதுவோ?
மெள்ளப் பிடித்துநெஞ்சில் - அணைத்திட
வேட்கை மிகுதே அம்மா!
22