பக்கம்:குழந்தை செல்வம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

குழந்தைச் செல்வம்


ஓடும் உதிரத்தில் - வடிந்து
     ஒழுகும் கண்ணீரில்,
தேடிப்பார்த்தாலும் - சாதி
     தெரிவதுண்டோ அப்பா? 10

பிறப்பினால் எவர்க்கும் - உலகில்
     பெருமை வாராதப்பா!
சிறப்பு வேண்டு மெனில் - நல்ல
     செய்கை வேண்டும். அப்பா! 11

நன்மை செய்பவரே - உலகம்
     நாடும் மேற்குலத்தார்;
தின்மை செய்பவரே -அண்டித்
     தீண்ட ஒண்ணாதார்.” 12

    சிறுவன் பால் தருதல்
நிலத்துயர் ஞானி-இவை
    நிகழ்த்தி, ”என் தம்பீ!
கலத்தினிலே கொஞ்சம்-பாலைக்
    கறந்து தா” என்றான். 13

ஆயர் சிறுவனும் - கலத்தில்
    அளிக்க வாங்கியுண்டு,
தாயினும் இனியன் - கொண்ட
     தளர்ச்சி நீங்கினனே. 14