பக்கம்:குழந்தை செல்வம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

குழந்தைச் செல்வம்


தெள்ளமுதம் உண்டு,
      தெவிட்டாக் கனி உண்டு, எம்
உள்ளங் குளிர
      உரையாடும் பைங்கிளியோ? 4

கற்கண்டு, சீனி,
      கனியுங் கனிந்தொழுகு
சொற்கொண்டு, எமக்குச்
      சுகமளிக்கும் பூங்குயிலோ? 5

நெஞ்சிற் கவலையெலாம்
      நீங்கத் திருமுகத்தில்
புஞ்சிரிப்பைக் காட்டி, எம்மைப்
      போற்றும் இளமதியோ? 6

ஆரடித்தார் நீ அழுதாய்,
      அடித்தாரைச் சொல்லி அழு;
சீரெடுத்த செல்வச்
      சீமான் திருக்குமரா! 7

பாலை விரும்பினையோ?
      பணிகாரம் வேண்டினையோ?
சோலைப் பசுங்கிளியே!
       சுந்தரமே ! சொல்லி அழு. 8

சப்பாணி கொட்டித்
       தளர்ந்தனையோ? அல்லதுன்றன்
கைப்பாவைக் காகக்
       கலங்கி அழுதனையோ? 9