பக்கம்:குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குழந்தைச் சித்திரம்

57

யந்திரங்கள் வந்து நெருப்பை அணைத்த விவரத்தையும், வேலைக்காரனோடு சென்று அதை அந்தச் சிறுவன் கண்டு வந்த செய்தியையும் எனக்கு எடுத்துச் சொன்னார்கள். எரிந்து போன குடிசைகளின் தோற்றம் அச்சிறுவனின் உள்ளத்திலே பதிந்திருக்கிறது. அது படமாக உருவெடுத்து விட்டது. இந்த விவரம் தெரிந்த பிறகு அவன் வரைந்த படத்தை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது.

சந்தச் சித்திரத்தைத் தொடர்ந்து குறியீட்டுச் சித்திரம் தோன்றுகிறது. குழந்தை பலவகையான சின்னங்களால்

சின்னக்குழந்தை ஆரம்பத்தில் இவ்வாறு கற்பனையாகவே சித்திரம் வரைகிறது. வயது ஆக ஆகத்தான் காணும் இயற்கைப் பொருள்களையும், உயிர்ப் பிராணிகளையும் வரைவதில் கவனம் செலுத்துகிறது. அப்பொழுது