48
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
தலைமேல் கைவைத்துக் கொண்டு, தரையில் உட்கார்ந்து விட வேண்டும்.
இவ்வாறு இரண்டுமுறை செய்து, மந்திரி, அவர்களிடமிருந்துதப்பித்துக் கொள்ளலாம். மூன்றாவது முறை அவர் தலைமீது கை வைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டால், அவர் ஆட்டம் இழக்கிறார். அவர் யாராலாகிலும் தொடப்பட்டாலும், ஆட்டம் இழந்து விடுகிறார்.
மந்திரியை யார் தொடுகின்றாரோ அவர் மந்திரியாக மாறுகிறார். அல்லது அவர் தானாக ஆட்டம் இழந்து விட்டால், மெய்க்காப்பாளர்களில் ஒருவர் மந்திரியாகி விடலாம். இவ்வாறு அடுத்தடுத்து ஆட்டம் தொடர வேண்டும்.
29. பொம்மையாட்டம்
|
அமைப்பு:
இந்த ஆட்டத்திற்குரிய ஆடுகளத்திற்குக் குறிப்பிட்ட, ஓர் பரந்த எல்லை உண்டு, இருக்கின்ற இடம் முழுவதையுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.
எல்லோரும் ஆங்காங்கே நின்று கொண்டிருக் கையில், கையில் ஒரு பொம்மையுடன் ஒருவர் தனியே நிற்கவேண்டும், அவரைக் காப்பதற்கு வேறு 5 பேர்களும் இருக்க வேண்டும்.