54
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
ஆடும் முறை:
ஒரு மூலையிலே தனியாக நின்றுகொண்டிருக்கும் ஒரு இரட்டையர் (குதிரையும் குதிரை வீரரும்), ஆடுதற்கு சைகை கிடைத்தவுடன், மற்ற இரட்டையர் களை விரட்டித் தொட வேண்டும்.
யார் தொடப்படுகிறாரோ, அவர் விரட்டுபவராக மாற இவ்வாறு ஆட்டம் தொடரும்.
குறிப்பு:
ஒருவரே குதிரையாகவும், மற்றவர் குதிரை வீரராகவும் அதிக நேரம் ஆட முடியாது. ஆகவே, வீரர் குதிரையாகி சுமக்கவும், சுமந்தவர் சிறிது நேரம் அவர் முதுகில் அமர்ந்திருக்கவும் என்று மாறி மாறி ஆடினால் ஆட்டம் சுமுகமாக நடக்கும்.
இல்லையேல் ஒருவருக்கு சுமையாகவும் மற்றவருக்கு சுகமாகவும் இருக்கும். அப்பொழுது ஆட்டத்தை எப்படி இனிதே தொடர முடியும்? ஆகவே, இடம் மாற்றிக்கொண்டு ஆட வேண்டும்.
34. வாலைப்பிடி
|
அமைப்பு:
ஆட வந்திருக்கும் ஆட்டக்காரர்களையெல்லாம் ஐந்து ஐந்து பேர்கள் கொண்ட குழுவாகப் பிரித்து, பல குழுக்களாக்க வேண்டும்.