இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
74
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
எல்லையை அடைவதற்குள் பிடிபட்டவர்கள் பருந்தாக மாறி ஆட, மீண்டும் அவரவர் இடத்தில் நின்ற பிறகு, முன்னர் கூறியது போலவே ஆட்டம் தொடரும்.
பருந்துகள் நிற்குமிடம் |
கோழிக் குஞ்சுகள் நிற்குமிடம் |
சேரும் எல்லை |
49. ஊரும் பேரும்
|
எல்லோரும் வட்டமாக நின்று கொண்டிருக்க வேண்டும் வட்டத்தின் மத்தியில் ஒருவர் நிற்க வேண்டும்.
வட்டத்தில் நிற்கின்ற ஒவ்வொருவருக்கும் ஒரு ஊரின் பெயர் உண்டு. (இல்லையென்றால் அவருக்குரிய பெயரையே வைத்து விளையாடலாம்).
வட்டத்தின் நடுவில் நிற்பவர், இருவரின் பெயர்களை உரக்கச் சொல்லவேண்டும். தன் பெயரைக் கேட்டவுடனேயே அந்த இருவரும் தங்கள் இடங்களை மாற்றிக் கொள்வதற்காக ஓடவேண்டும்.