பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ஆடுகளத்திற்கு வெளியே கின்று பங்தை ஆடவே கூடாது. அங்கிருந்து வளையத்திற்குள் பங்தை எறிந்து வெற்றி பெற்ருலும், அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. . குறுகிய ஆடுகளத்திற்குள் பந்துக்காக ஒடி ஆடும் பொழுது ஒருவர் மேல் ஒருவர் உடல் தொடர்பு கொள்வது போல் இருப்பது இயல்பே. அதற்காக, எதிர்க் குழுவினரை வேண்டுமென்றே இடிப்பதோ, அவர் மேல் ஏறிக் குதிப்பதோ, எகிறி விழுவதோ, மற்றும் கால்களை இடறி விடுவதோ கூடாது. அது பெருங் தவருகும்.