பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 மேலே கூறிய தவறுகளே, முதன்முறையாக எச்சரித்தப் பிறகும் மீண்டும் செய்தால், அவர்மேல் பெருங்குற்றம் சாட்டப்படும். மீண்டும் அதையே திரும்பச் செய்தால், ஆட்டத்தை விட்டே வெளியேற்றப்படுவார். பெருங்குற்றத்திற்கு 2 தனி எறிகள் தண்டனையைக் கொடுத்து, எதிர்க்குழுவில் உள்ளவர் ஒருவரை, அவரது குழுத் தலைவரை தெரிந்தெடுக்கச்செய்து அவரை எறியச் ச்ொல்வார் நடுவர். . தனி எறி நடந்த பிறகு, தனி எறி வெற்றி பெற்ருலும், பெருவிட்டாலும், மையக் கோட்டுக்கு அருகே உள்ள பக்கக் கோட்டிற்கு வெளியேயிருந்து, தனி எறி எடுத்தக் குழுவினர் உள்ளெறிதலைச் செய்ய, மீண்டும் ஆட்டம் தொடங்குகிறது. | குழு மேலாளர் அல்லது பயிற்சியாளர் பெருங்குற்றத் திற்கு ஆளானல், ஒரே ஒரு தனி எறிமட்டும் தண்டனையாக நடுவர் தருவார். அது முன்னர் விவரிக்கப்பட்டது போலவே செயல்படுத்தப்படும். இதற்குப் பிறகு மீண்டும் இதே தவறை அவர் செய்தால், ஆடுகள மைதானப் பகுதியை விட்டே அவர் அப்புறப் படுத்தப் படுவதுடன், அவரது பொறுப்பைக் குழுத் த ல வ ரே ஏற்றுக் கொண்டு செயல்படுவார். - (9) QTL 6 DL-$ 56ugy (Double Foul) இரட்டைத் தவறென்பது எதிராளிகளான இருவர் சேர்ந்தாற்போல் ஒரே நேரத்தில் ஒருவருக்கொருவ தவறினை இழைத்துக்கொள்வதாகும். இரட்டைத் தவறு கடக்கும்பொழுது, தனி எறி கொடுக்கப்படுவதில்லை ஆல்ை தவறிழைத்த ஒவ்வொருவர் மேலும் தனியா தவறு சுமத்தப்படும். தவறிழைத்த ஆட்டக்காரர்கள் இருவரும் அருக மையிலுள்ள வட்டத்தில் நடைபெறும் "பந்துக்காக, தாவலில் பங்குபெற ஆட்டம் தொடங்கும்.